என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் தொடரில் ஸ்மித், வார்னருக்கு இடமில்லை: நேரடியாக உலகக்கோப்பையில் களம் இறங்க வாய்ப்பு
Byமாலை மலர்8 March 2019 10:52 AM GMT (Updated: 8 March 2019 10:52 AM GMT)
பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் உலகக்கோப்பையில் நேரடியாக விளையாடுகிறார்கள். #Smith #Warner
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்மித், வார்னர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. கேப் டவுனில் நடைபெற்ற ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் அப்போது கேப்டனாக செயல்பட்ட ஸ்மித், துணைக் கேப்டனாக திகழ்ந்த வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சர்வதேச போட்டியில் விளையாட ஒரு வருடம் தடைவிதித்தது. இந்த தடைக்காலம் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்க இருக்கிறது. முதல் போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 24-ந்தேதியும், 3-வது போட்டி 27-ந்தேதியும், 4-வது போட்டி 29-ந்தேதியும், ஐந்தாவது போட்டி மார்ச் 31-ந்தேதியும் நடக்கிறது.
ஸ்மித், வார்னர் 4-வது போட்டியில் இருந்து பங்கேற்கலாம். முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருவரும் கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்தனர். தற்போது காயத்தில் இருந்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலும் இருவரும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
அதில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இருவரும் உலகக்கோப்பையின்போது நேரடியாக சர்வதேச போட்டியில் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அப்போது கேப்டனாக செயல்பட்ட ஸ்மித், துணைக் கேப்டனாக திகழ்ந்த வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சர்வதேச போட்டியில் விளையாட ஒரு வருடம் தடைவிதித்தது. இந்த தடைக்காலம் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்க இருக்கிறது. முதல் போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி 24-ந்தேதியும், 3-வது போட்டி 27-ந்தேதியும், 4-வது போட்டி 29-ந்தேதியும், ஐந்தாவது போட்டி மார்ச் 31-ந்தேதியும் நடக்கிறது.
ஸ்மித், வார்னர் 4-வது போட்டியில் இருந்து பங்கேற்கலாம். முழங்கை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இருவரும் கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்தனர். தற்போது காயத்தில் இருந்து மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளிலும் இருவரும் இடம்பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
அதில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இருவரும் உலகக்கோப்பையின்போது நேரடியாக சர்வதேச போட்டியில் களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X