என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4-வது ஒருநாள் கிரிக்கெட்- தவான், விராட் கோலி அவுட்- ரோகித் சர்மா அரைசதம்- இந்தியா 136/2
Byமாலை மலர்29 Oct 2018 9:58 AM GMT (Updated: 29 Oct 2018 9:58 AM GMT)
4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தவான், விராட் கோலி ஆட்டமிழந்த நிலையில், ரோகித் சர்மா அரைசதம் அடித்துள்ளார். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். சாஹல், ரிஷப் பந்த் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், ஜடேஜா சேர்க்கப்பட்டனர்.
ரோகித் சர்மா - தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 71 ரன்னாக இருக்கும்போது தவான் ஆட்டமிழந்தார். தவான் 40 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.
அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். இந்தியாவின் ஸ்கோர் 16.4 ஓவரில் 101 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ரோச் பந்தில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். 22-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரோகித் சர்மா 37-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா 24 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 59 ரன்னுடனும், அம்பதி ராயுடு 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ரோகித் சர்மா - தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் ஸ்கோர் 11.5 ஓவரில் 71 ரன்னாக இருக்கும்போது தவான் ஆட்டமிழந்தார். தவான் 40 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.
அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். இந்தியாவின் ஸ்கோர் 16.4 ஓவரில் 101 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ரோச் பந்தில் வெளியேறினார்.
3-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். 22-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரோகித் சர்மா 37-வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்தியா 24 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 59 ரன்னுடனும், அம்பதி ராயுடு 15 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X