search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- ஜடேஜா, உமேஷ் யாதவ் அவுட்
    X

    3-வது ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- ஜடேஜா, உமேஷ் யாதவ் அவுட்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

    3-வது ஆட்டம் புனேயில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் 1 மணிக்கு சுண்டப்பட்டது. விராட் கோலி டாஸ் சுண்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் ‘ஹெட்’ என அழைத்தார். ஆனால் ‘டெய்ல்’ விழ விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு பும்ரா, புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×