search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் சாய்னா நேவால்
    X

    அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் சாய்னா நேவால்

    ஆசிய விளையாட்டு போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார். #AsianGames2018
    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலெம்பாங்கில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.

    ஒரு காலிறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் இந்தோனேசியாவில் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொண்டார். இதில் சாய்னா நேவால் 21-18, 21-16 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.



    பேட்மிண்டனில் அரையிறுயில் தோல்வியடையும் வீராங்கனைகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும். இதனால் சாய்னா நேவால் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன்மூலம் 1982-ம் ஆண்டுடிற்குப் பிறகு இந்தியா ஆசிய விளையாட்டு போட்டி பேட்மிண்டனில் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வெல்லப் போகிறது.
    Next Story
    ×