search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூதருக்கு மது கொடுத்து தென்கொரியா வெற்றியை கொண்டாடிய மெக்சிகோ ரசிகர்கள்
    X

    தூதருக்கு மது கொடுத்து தென்கொரியா வெற்றியை கொண்டாடிய மெக்சிகோ ரசிகர்கள்

    நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 2-0 என கொரியா வீழ்த்தியதால், அந்நாட்டு தூதருக்கு மதுக்குகொடுத்து கொண்டாடினார்கள் மெக்சிகோ ரசிகர்கள். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ‘எஃப்’ பிரிவின் கடைசி லீக்கில் ஜெர்மனி - தென்கொரியா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் ஜெர்மனி விளையாடியது. ஆனால் 0-2 என தோல்வியை சந்தித்தது.

    அதேவேளையில் ஸ்வீடனிடம் மெக்சிகோ 0-3 என வீழ்ந்தது. ஒருவேளை கொரியாவை ஜெர்மனி வீழ்த்தியிருந்தால் மெக்சிகோ தொடக்க சுற்றோடு வெளியேறியிருக்கும்.

    ஆகவே ஜெர்மனியை வீழ்த்தி வயிற்றில் பால் வார்த்த கொரியாவின் வெற்றியை மெக்சிகோ விமர்சையாக கொண்டாடி வருகிறது. கொரிய வெற்றி பெற்றதும் மெக்சிகோ ரசிகர்கள் மெக்சிகோவிற்காக கொரிய தூதரகத்திற்கு சென்றார்கள்.



    அங்கு சென்ற அவர்கள் கொரியா தூதரை வெளியே அழைத்தனர். அப்போது ரசிர்கள் அவருக்கு மதுபானம் கொடுத்து வெற்றியை கொண்டினார்கள். அவரும் மது அருந்துவிட்டு கையை தூக்கி வெற்றி முழக்கமிட்டார்.
    Next Story
    ×