search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்போதைய பிரேசில் அணி நெய்மரை மட்டுமே சார்ந்து இல்லை - மரடோனா
    X

    தற்போதைய பிரேசில் அணி நெய்மரை மட்டுமே சார்ந்து இல்லை - மரடோனா

    கால்பந்து ஜாம்பவானான மரடோனா, தற்போதைய பிரேசில் அணி நெய்மரை மட்டுமே சார்ந்து இல்லை என்று தெரிவித்துள்ளார். #WorldCup2018 #neymar
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இன்று நடைபெறும் போட்டி ஒன்றில் முன்னணி அணியான பிரேசில் சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

    உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பிரேசில் கருதப்படுகிறது. அதற்கு அந்த அணியில் கேப்டன் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ, மார்சிலோ போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்திருப்பதே காரணம்.

    இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவானான மரடோனோ, தற்போதைய பிரேசில் அணி நெய்மரை மட்டுமே சார்ந்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மரடோனா கூறுகையில் ‘‘புதிய பயிற்சியாளர் டைட் வந்த பிறது அந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 21 போட்டிகளில் 17-ல் வெற்றி பெற்றுள்ளது. 47 கோல்கள் அடித்துள்ள நிலையில், 5 கோல்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.

    அந்த அணியில் நெய்மர் மட்டுமல்ல, தரம்வாயந்த மற்ற சில வீரர்களும் உள்ளனர். சுவிட்சர்லாந்து, செர்பியா, கோஸ்டா ரிகா அணிகளுக்கு எதிராக அவர்கள் சிறந்த சோதனை காத்திருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×