search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவது கோலிக்கு நல்ல பலனை தரும் - கேரி கிறிஸ்டன்
    X

    கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடுவது கோலிக்கு நல்ல பலனை தரும் - கேரி கிறிஸ்டன்

    இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாட முடிவெடுத்திருப்பது நல்ல பலனை தரும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். #ViratKohli #GaryKirsten

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் இவர், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் சரியாக சோபிக்கவில்லை.

    கடந்த 2014-ம் ஆண்டு இந்தியா இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்டில் விளையாடியது. அப்போது 5 டெஸ்டில் 134 ரன் மட்டுமே கோலி எடுத்தார். இதன் சராசரி 13.40 ஆகும். இதனால், ஸ்விங் ஆகும் இங்கிலாந்து ஆடுகளத்தில் விராட் கோலி சாதித்து காட்டட்டும். அதன்பின் அவரை சிறந்த வீரராக கருதுகிறோம் என்று முன்னாள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

    இந்தியா 2016-ல் இருந்து விராட் கோலி தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியது. இனிமேல் இந்தியாவிற்கு தொடர்ந்து வெளிநாட்டு தொடர்கள் தான் உள்ளன. 

    வரும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள், டி20 தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதில் விராட் கோலி சிறப்பாக விளையாடுவது மட்டுமல்ல, இந்தியா சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இதனால் விராட் கோலி தனது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள கவுன்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமும் பச்சைக் கொடி காட்டியது. இங்கிலாந்தின் முன்னணி கவுன்டி அணியான சர்ரே, விராட் கோலியை ஒப்பந்தம் செய்தது. விராட் கோலி ஜூன் மாதம் முழுவதும் அந்த அணிக்காக விளையாட இருக்கிறார்.

    இந்நிலையில், விராட் கோலியின் இந்த முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது எல்லா வீரருக்கும் சிறந்த வாய்ப்பாக அமையும். உலகின் எல்லா வீரர்களும் அதில் விளையாடுவதை விரும்புவார்கள். 

    இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக விராட் கோலி, கவுன்டி தொடரில் விளையாட உள்ளது அவருக்கு மிகவும் உதவியாக இருக்கும். அங்குள்ள சீதோஷன நிலையை உணர்ந்து கொள்ள சிறப்பான வாய்ப்பாக இது இருக்கும். அவருக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் இது உதவக்கூடிய ஒன்றே” என தெரிவித்துள்ளார். #ViratKohli #GaryKirsten
    Next Story
    ×