என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் 2018- சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் பிளேயில் 51-1
Byமாலை மலர்28 April 2018 3:03 PM GMT (Updated: 28 April 2018 3:03 PM GMT)
சென்னை சூப்பர் கிங்ஸ் பவர் பிளே ஆன முதல் 6 ஓவரில் வாட்சனை இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. #IPL2018 #CSKvMI
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 27-வது லீக் ஆட்டம் புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்க்கு இடையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கிளேனகன் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் வாட்சன் ஒரு ரன் அடித்தார். 3-வது பந்தை அம்பதி ராயுடு சிக்சருக்கு தூக்கினார். இதனால் அம்பதி ராயுடு இன்று பவர்பிளேயில் வாணவேடிக்கை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்பதி ராயுடுவால் அதிரடியாக விளையாட முடியவில்லை. முதல் ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் எடுத்தது.
2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் அம்பதி ராயுடுவை திணற வைத்தார். பும்ரா இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3-வது ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் பந்து பவுண்டரி கோட்டிற்கு பறக்காததால் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
4-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இதில் ராயுடு ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் வாட்சன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் அடித்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார்.
3-வது பந்தை அம்பதி ராயுடு சிக்சருக்கு தூக்க, கடைசி பந்தை ரெய்னா சிக்சருக்கு தூக்கினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 5-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.
6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் நான்கு பந்து சென்னைக்கு கிளிக் ஆகவில்லை. ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் விரட்டினார் அம்பதி ராயுடு. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்தது.
அதன்படி அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கிளேனகன் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் வாட்சன் ஒரு ரன் அடித்தார். 3-வது பந்தை அம்பதி ராயுடு சிக்சருக்கு தூக்கினார். இதனால் அம்பதி ராயுடு இன்று பவர்பிளேயில் வாணவேடிக்கை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்பதி ராயுடுவால் அதிரடியாக விளையாட முடியவில்லை. முதல் ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் எடுத்தது.
2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் அம்பதி ராயுடுவை திணற வைத்தார். பும்ரா இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3-வது ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் பந்து பவுண்டரி கோட்டிற்கு பறக்காததால் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
4-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இதில் ராயுடு ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் வாட்சன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் அடித்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார்.
3-வது பந்தை அம்பதி ராயுடு சிக்சருக்கு தூக்க, கடைசி பந்தை ரெய்னா சிக்சருக்கு தூக்கினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 5-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.
6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் நான்கு பந்து சென்னைக்கு கிளிக் ஆகவில்லை. ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் விரட்டினார் அம்பதி ராயுடு. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X