search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குதிரை பேரத்தை தடுக்க நம்பிக்கை வாக்கெடுப்புதான் சிறந்த வழி- ஏக்நாத் ஷிண்டே உச்ச நீதிமன்றத்தில் வாதம்
    X

    ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

    குதிரை பேரத்தை தடுக்க நம்பிக்கை வாக்கெடுப்புதான் சிறந்த வழி- ஏக்நாத் ஷிண்டே உச்ச நீதிமன்றத்தில் வாதம்

    • நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
    • சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே சிறந்த வழி என்று ஏக்நாத் ஷிண்டேவின் வழக்கறிஞர் வாதம்

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பி உள்ளார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது.

    சிவசேனா கொறடா சுனில் பிரபு சார்பில் வக்கீல் ஏ.எம்.சிங்வி இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்டில் நிலுவையில் இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு மராட்டிய கவர்னர் உத்தரவிட்டது சட்ட விரோதமானது என்றும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால அமர்வான நீதிபதிகள் சூரியகாந்த், பர்திவாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிருப்தி குழுவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் ஆஜராகி வாதாடினார். அப்போது, உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு நம்பிக்கையற்ற சிறுபான்மையாக கட்சிக்குள் இருப்பதாகவும், குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த வேண்டுமானால், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே சிறந்த வழி என்றும் கூறினார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டால் அது ஜனநாயக அரசியலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். தகுதிநீக்க நடைமுறையானது சபாநாயகர் முன் நிலுவையில் இருப்பதை வைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் ஷிண்டேவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

    உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நாளை நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பங்கேற்போம் என ஏக்நாத் ஷின்டே கூறி உள்ளார்.

    Next Story
    ×