search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள்- விவாதத்தை ஏற்படுத்திய பதிவு
    X

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த பயணிகள்- விவாதத்தை ஏற்படுத்திய பதிவு

    • பெட்டியில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தி உள்ளது.
    • பதிவு வைரலாகி 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதொடு, பயனர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது.

    நாடு முழுவதும் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பாபு பையா என்ற பயனர் சமீபத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அவர் குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் இருந்து சாலிமர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளார். ரெயிலில் முன்பதிவு பெட்டியான எஸ்-5 கோச்சில் பயணம் செய்த போது அங்கு டிக்கெட் இல்லாமலேயே பலர் ஏறி பயணம் செய்துள்ளனர்.

    இது அந்த பெட்டியில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் தொந்தரவை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்களுடன் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதோடு, ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். அவரது இந்த பதிவு வைரலாகி 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதொடு, பயனர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து அவரது பதிவுக்கு ரெயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதிலில், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    Next Story
    ×