search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒமிக்ரான் வைரஸ் கழிவு நீர் மூலம் பரவியது கண்டுபிடிப்பு
    X

    ஒமிக்ரான் வைரஸ் கழிவு நீர் மூலம் பரவியது கண்டுபிடிப்பு

    • உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் குறைந்த பின்பு 2-வது மற்றும் 3-வது கொரோனா அலை பரவியது.
    • மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ் என்று குறிப்பிட்டனர்.

    புதுடெல்லி:

    உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் குறைந்த பின்பு 2-வது மற்றும் 3-வது கொரோனா அலை பரவியது.

    இதனை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வகை வைரஸ் என்று குறிப்பிட்டனர். இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர்.

    இதில் பெங்களூருவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் ஜூலை 30-ந் தேதி வரை நகரின் கழிவு நீர் ஓடைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஒமிக்ரான் வகை வைரஸ் கழிவு நீர் மூலம் பரவுவது தெரியவந்துள்ளது. இதில் அதிக வீரியம் கொண்ட பி ஏ 2-10 வகை வைரஸ் கழிவு நீரில் 14.83 சதவீதம் அளவுக்கு இருப்பது தெரியவந்தது.

    இதுபோல பிஏ 2 வகை வைரஸ் 10.49 சதவீதமும், பி.1-1529 வகை வைரஸ் 5.1 சதவீதம் அளவுக்கும் இருப்பது கண்டறியப்பட்டது.

    பெங்களூருவில் 878 கழிவு நீர் மாதிரிகளை சேகரித்து எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் தெரியவந்ததாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்தனர். இது பற்றி அவர்கள் மேலும் கூறும்போது, கடந்த மே மாதம் பிஏ 2-வகை வைரசின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

    இதுவே ஜனவரி மாதம் பிஏ 2-12 வகை வைரசின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இக்காலகட்டத்தில் 7 வகையான மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது, என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×