search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சென்னை வானிலை ஆய்வு மையம் அதிநவீனமானது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னை வானிலை ஆய்வு மையம் அதிநவீனமானது

    • வெள்ள பாதிப்பு குறித்து அறிந்தவுடன் உள்துறை அமைச்சரை சந்தித்து உதவி கோரினேன்.
    • தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து விமானப்படை மூலம் பலரை மீட்டெடுத்தோம்.

    டெல்லி:

    மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தென்மாவட்டங்களில் ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது.

    * வெள்ள பாதிப்பு குறித்து அறிந்தவுடன் உள்துறை அமைச்சரை சந்தித்து உதவி கோரினேன்.

    * தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்ட இடங்களில் இருந்து விமானப்படை மூலம் பலரை மீட்டெடுத்தோம்.

    * இந்த வருடத்திற்கு கொடுக்க வேண்டிய ரூ.900 கோடியில் முதல் தவணையாக ரூ.450 கோடியும், முன்னதாகவே இரண்டாவது தவணையாக ரூ.450 கோடியும் வழங்கப்பட்டது.

    * சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் மிகவும் அதிநவீனமானது.

    * சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கையை 5 நாட்கள் முன்கூட்டியே அறிவித்தது.

    * ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் வானிலை ஆய்வு மையம் மூலம் கனமழை குறித்த அப்டேட் கொடுக்கப்பட்டது.

    * முன்னெச்சரிக்கை முறையாக கிடைக்கவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×