என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
![ஆந்திராவில் ஆட்டோ மீது கார் மோதல்- 6 பேர் பலி ஆந்திராவில் ஆட்டோ மீது கார் மோதல்- 6 பேர் பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/12/23/1996558-accient.webp)
ஆந்திராவில் ஆட்டோ மீது கார் மோதல்- 6 பேர் பலி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கார் கட்டுப்பாட்டை மீறி எதிர்ப்புறத்தில் வந்த ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதியது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர்கள் ராய நாகேஸ்வரராவ் மற்றும் ராய வெங்கடேஸ்வர ராவ்.
இவர்கள் இருவரும் பிரகாசம் மாவட்டம், கொமரோலுவில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று காரில் சென்றனர்.
நாகேஸ்வரராவ் காரை ஓட்டினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் மீண்டும் குண்டூர் நோக்கி காரில் வந்து கொண்டு இருந்தனர்.
பிரகாசம் மாவட்டம், அனந்தபூர்-அமராவதி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது குந்தாவில் இருந்து மார்க்காபுரம் நோக்கி 8 பயணிகளுடன் ஆட்டோ ஒன்று வந்தது. ஆட்டோவை மார்க்கபுரம் பி.எஸ். காலனியை சேர்ந்த ஷேக் அபித் உசேன் (46) என்பவர் ஒட்டி வந்தார். திடீரென கார் கட்டுப்பாட்டை மீறி எதிர்ப்புறத்தில் வந்த ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் ஆட்டோ சுமார் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது.
காரின் இடிபாடுகளில் சிக்கி நாகேஸ்வரராவ், ராய வெங்கடேஸ்வரா, ஆட்டோ டிரைவர் ஷேக் அபித் உசேன் ஆகியோர் உடல் நசங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவற்றில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு சிகிச்சைக்காக குண்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா (12), டேனியல் (45) ரத்னாதேவி (9) ஆகியோர் இறந்தனர்.
மேலும் ஆட்டோவில் பயணம் செய்த வேளாண் கல்லூரி 3 மாணவிகள் படுகாயத்துடன் மார்க்கபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)