search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உ.பியில் லாரி மீது டிராக்டர் மோதி விபத்து- 4 பேர் பலி
    X

    உ.பியில் லாரி மீது டிராக்டர் மோதி விபத்து- 4 பேர் பலி

    • காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்துள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் உள்ள தல்பேஹாட் காவல் நிலையப் பகுதியில் இன்று காலை டிராக்டரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 4 பேர் உயிரிழந்தனர், மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.






    Next Story
    ×