search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இப்போ இல்லை.. எப்பவுமே இப்படித் தான் தீபாவளி கொண்டாடுறேன்.. பிரதமர் மோடி
    X

    இப்போ இல்லை.. எப்பவுமே இப்படித் தான் தீபாவளி கொண்டாடுறேன்.. பிரதமர் மோடி

    • புகைப்படங்களை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
    • ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் இடம் கோயிலுக்கு நிகரான ஒன்று.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலம் சென்று எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார்.

    அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் நரேந்திர மோடி ராணுவ உடை அணிந்திருக்கிறார்.

    இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, "நீங்கள் இருக்கும் இடத்தில் தான் எனக்கு பண்டிகையே. நான் பிரதமர் மற்றும் முதலமைச்சர் போன்ற பதவிகளில் இல்லாத சமயத்திலும், தீபாவளியன்று ராணுவ வீரரர்களை சந்தித்து இருக்கிறேன்."

    "ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் இடம் கோயிலுக்கு நிகரான ஒன்று. நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு பூஜைகளிலும், நமது எல்லையை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கான பிரார்த்தனை நடைபெறுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு விளக்கு, அவர்களுக்காக ஏற்றப்படுகிறது," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×