search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு.. நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு
    X

    உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு.. நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு

    • சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமின் மனுவை விசாரிக்கும் நீதிபதிகள் அறிவிப்பு.

    சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வருகிறது.

    இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதன் காரணமாக ஜாமின் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா. எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரிக்க இருக்கிறது.

    Next Story
    ×