search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் இம்மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்தது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கேரளாவில் இம்மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்தது

    • இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
    • கேரளாவில் ஜூன் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 251.8 மி.மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும்.

    இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது.

    அடுத்தடுத்த நாட்களில் மழையின் வேகம் குறைய தொடங்கியது. பின்னர் பல மாவட்டங்களில் மழை பெய்யவில்லை.

    ஜூன் மாதம் 2 வாரங்கள் முடிந்த நிலையில் தென்மேற்கு பருவமழை அளவு குறித்த விபரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இதில் கடந்த 2 வாரங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

    கேரளாவில் ஜூன் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 251.8 மி.மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 108.7 மி.மீட்டர் அளவுக்கே மழை பெய்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் பெய்த மழை அளவை விட மிகவும் குறைவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×