என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
கேரளாவில் இம்மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்தது
BySuresh K Jangir15 Jun 2022 4:44 AM GMT (Updated: 15 Jun 2022 7:16 AM GMT)
- இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
- கேரளாவில் ஜூன் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 251.8 மி.மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தொடங்கும்.
இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்தது.
அடுத்தடுத்த நாட்களில் மழையின் வேகம் குறைய தொடங்கியது. பின்னர் பல மாவட்டங்களில் மழை பெய்யவில்லை.
ஜூன் மாதம் 2 வாரங்கள் முடிந்த நிலையில் தென்மேற்கு பருவமழை அளவு குறித்த விபரங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இதில் கடந்த 2 வாரங்களில் இயல்பை விட குறைவாகவே மழை பெய்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
கேரளாவில் ஜூன் 1-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 251.8 மி.மீட்டர் மழை பெய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 108.7 மி.மீட்டர் அளவுக்கே மழை பெய்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் பெய்த மழை அளவை விட மிகவும் குறைவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X