என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வைரலான ஆட்டோ டிரைவரின் அணுகுமுறை
- தற்போது எக்ஸ் தளத்தில் நயா என்ற பயனர் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது.
- டிரைவரின் அணுகுமுறையை பயனர்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆட்டோக்களில் இடம்பெறும் வித்தியாசமான வாசகங்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில், ஜிபே பயன்பாடு இல்லை. மேலும் ஏ.டி.எம். மையம் முன்பு ஆட்டோ நிற்காது என குறிப்பிட்டிருந்த வாசகம் இணையத்தில் பரவி இருந்தது.
இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் நயா என்ற பயனர் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது. அதில், ஆட்டோ ரிக்ஷாவில் வைக்கப்பட்டிருந்த நோட்டீசின் புகைப்படம் இருந்தது. அதில், டிரைவரை 'பய்யா' என்று அழைப்பதை தவிர்க்குமாறும், அதற்கு பதிலாக பாய், தாதா, பாஸ் அல்லது சகோதரர் என மாற்று மரியாதைக்குரிய சொற்களை பயன்படுத்துமாறும் பயணிகளை கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது.
டிரைவரின் இந்த அணுகுமுறையை பயனர்கள் பலரும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
i saw this in the auto today?? pic.twitter.com/FTR52h4cho
— naya (@nayascrackhouse) April 4, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்