search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது- பலாத்காரம் செய்த மேலும் 5 பேரும் சிக்கினர்
    X

    காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது- பலாத்காரம் செய்த மேலும் 5 பேரும் சிக்கினர்

    • காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.
    • மாணவி சோர்வாக இருந்ததை நோட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி இருந்துள்ளனர்.

    இந்நிலையில் மாணவியை அவளது காதலன் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்திருக்கிறார். இந்நிலையில் தனக்கு பணக்கஷ்டம் இருப்பதாகவும், தனக்கு பணம் கொடுத்து உதவுமாறும் காதலனிடம் மாணவி கேட்டி ருக்கிறார். இதையடுத்து அவர், தனது நண்பர்கள் சிலரை சந்திக்குமாறு கூறி கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

    மாணவியும் காதலன் கட்டாயப்படுத்தியதன் காரணமாக, காதலனின் நண்பர்கள் 5 பேரை சென்று சந்தித்திருக்கிறார். அப்போது அவர்கள் மாணவியை வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனால் அந்த மாணவி உடலளவில் பாதித்திருக்கிறார்.

    அதனுடனேயே பள்ளிக்கு மாணவி சென்று வந்தபடி இருந்திருக்கிறார். மாணவி சோர்வாக இருந்ததை நோட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அதுகுறித்து அவரிடம் விசாரித்துள்ளது. ஆனால் மாணவி பள்ளி நிர்வாகத்திடம் முதலில் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்பு தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்த விவரத்தை தெரிவித்திருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அதுகுறித்து சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாதிப்புக்குள்ளான மாணவியிடம் சைல்டுலைன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த மாணவி, காதலன் மற்றும் அவரது நண்பர்கள் என 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆகவே அதுபற்றி சைல்டு லைன் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது காதலன் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமும், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×