search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழக வெள்ள பாதிப்பு - தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது

    • 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.
    • மத்திய அரசு கொடுத்த நிதியை சரியாக செலவழிக்கவில்லை.

    டெல்லி:

    மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மழை குறித்த எச்சரிக்கையின் அடிப்படையில் அரசு எடுத்த குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிகை நடவடிக்கை என்ன?

    * சென்னையில் ரூ.4000 கோடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் குறித்து முரணான கருத்தை அமைச்சர்கள் கூறினார்கள்.

    * முதலில் 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததாக ஒரு அமைச்சர் கூறினார். பின்னர் 42 சதவீதம் மட்டும் நிறைவு பெற்றதாக மற்றொரு அமைச்சர் கூறுகிறார்.

    * மழைநீர் வடிகால் பணிகள் 42 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றதாக கூறினார்கள். அதிலும் சந்தேகம்.

    * மழைநீர் வடிகால் பணிகளை முறையாக மேற்கொண்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.


    * 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

    * சென்னை வானிலை ஆய்வு மையம் தாமதமாக எச்சரிக்கை வழங்கியது என்ற குற்ச்சாட்டை ஏற்க முடியாது.

    * சென்னை வானிலை ஆய்வு மையத்தில் உள்ள கருவிகள் அதிநவீனமானவை.

    * காப்பீட்டு நிறுவனங்கள் டிச.19ம் தேதியே சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தின.

    * 4 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது தமிழ்நாட்டு முதலமைச்சர் டெல்லியில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் இருந்தார்.

    * வெள்ள பாதிப்பின் போது டெல்லியில் இருந்து கொண்டு, மத்திய அரசை குறை கூறுவது நியாயமா?

    * மத்திய அரசு கொடுத்த நிதியை சரியாக செலவழிக்கவில்லை.

    * தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.

    * இந்தியாவில் இதற்கு முன்பு எப்போதும் தேசிய பேரிடர் என்ற ஒன்று இதுவரை அறிவிக்கப்பட்டதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×