செல்போன் கடைக்குள் சீறிப்பாய்ந்த காளை

வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 7 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும் குவித்தது.வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.
செல்போன் கடைக்குள் சீறிப்பாய்ந்த காளை
Published on

நகரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது பாய்வதும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் செல்போன் கடைக்குள் காளை மாடு ஒன்று சீறிப்பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிராக் பர்ஜாத்யா என்ற பயனரால் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் டெல்லியின் சங்கம்விஹார் பகுதியில் உள்ள ஒரு சிறிய செல்போன் கடையில் 2 வாலிபர்கள் வேலை பார்த்து கொண்டிருக்கின்றனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த காளை மாடு ஒன்று திடீரென அந்த செல்போன் கடைக்குள் சீறிப்பாய்ந்தது.

இதனால் கடையில் இருந்த தொழிலாளர்கள் பீதியுடன் வெளியேற முயன்றனர். ஆனால் காளையை விரட்ட முயன்ற நிலையில் கடையின் கவுண்டரை திறக்க முடியாமல் அவதிப்பட்டனர். இந்த வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 7 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும் குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், ஒரு மாடு சிறிய அறைக்குள் சீறிப்பாயும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், வீடியோ காட்சிகள் இல்லை என்றால் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை நம்ப வைக்க முயற்சிப்பதை கற்பனை செய்து பாருங்கள் என கேளிக்கையாக பதிவிட்டார். இதே போல பயனர்கள் பலரும், 'சீனா கடையில் காளை' என்ற பிரபலமான பழமொழியுடன் இந்த காட்சி பொருந்துகிறது என குறிப்பிட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com