search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல் கொடுத்த ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை
    X

    பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல் கொடுத்த ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை

    • ராணுவம் சகித்துக் கொள்ளாது என்பதால், குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை.
    • ராணுவ நீதிமன்றத்தால் ராணுவ வீரருக்கு வழங்கப்படும் தண்டனை, தகுதி வாய்ந்த மூத்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படும்.

    பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசியத் தகவலை அனுப்பியதாக பிடிபட்ட ராணுவ வீரருக்கு சிறைத்தண்டனை விதித்து அதிகாரி ஒருவர் தலைமையில் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    வடக்கு எல்லையில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து தேசிய தலைநகரில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக பிடிபட்ட ராணுவ வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் 10 ஆண்டு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்தியத் தலைநகரில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர் ஆணையத்தில் பணிபுரியும் பாகிஸ்தானை சேர்ந்த நாயக் அபித் என்ற அபித் ஹுசைனுடன் ராணுவ வீரர் தொடர்பில் இருந்தார்.

    எதிரி உளவு நிறுவனத்திற்கு ராணுவ வீரர் வழங்கிய ஆவணங்களின் பட்டியலில், அவர் நிலைநிறுத்தப்பட்ட அமைப்பின் பாதுகாப்புப் பணிப் பட்டியலும், அவரது சொந்த உருவாக்கத்தின் செயல்பாடுகளும் அடங்கும்.

    கொரோனா லாக்டவுனைக் கருத்தில் கொண்டு வாகனங்களின் நகர்வுப் பட்டியல் மற்றும் அதனுடன் வாகனங்கள் தொடர்பான தகவல்களையும் ரானுவ வீரர் அனுப்ப முயன்றுள்ளார்.

    இதுபோன்ற செயல்களை ராணுவம் சகித்துக் கொள்ளாது என்பதால், குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும், ராணுவ நீதிமன்றத்தால் ராணுவ வீரருக்கு வழங்கப்படும் தண்டனை, தகுதி வாய்ந்த மூத்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×