search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
    X

    குரங்கு அம்மை

    டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

    • கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த 35வயது நபர் உள்பட 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியானது.

    புதுடெல்லி:

    குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த 14-ம் தேதி முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவின் கொல்லம், கண்ணூர், மலப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 3 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. அதில் கொல்லத்தைச் சேர்ந்தவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிவிட்டார்.

    இதற்கிடையே, வெளிநாட்டில் குரங்கு அம்மை பாதித்த நிலையில் ஊர் திரும்பிய திருச்சூரைச் சேர்ந்த இளைஞர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு இறந்த முதல் நபர் என அவர் கருதப்பட்டுள்ளார். கேரளாவில் 3, டெல்லி, ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில், டெல்லியில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த 35வயது நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு எந்தவித பயணமும் மேற்கொள்ளவில்லை. அவர் டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் கொப்புளங்களும் இருப்பதால் அவரை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லியில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தொற்றின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×