என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பிரதமர் மோடி அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும்: சஞ்சய் ராவத்
Byமாலை மலர்2 Jun 2022 3:23 AM GMT (Updated: 2 Jun 2022 3:23 AM GMT)
அகங்காரம் ஒழிந்துவிட்டால் சமுதாயத்தையும், மாநிலத்தையும், நாட்டையும் ஆட்டிப்படைக்கும் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை :
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்றுவது, அனுமன் பஜனை விவகாரம் என மராட்டிய மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கு அடுத்தடுத்த பிரச்சினைகள் தலைதூக்கி வருகின்றன. நவநிர்மாண் சேனா, சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா மூலம் இந்த பிரச்சினை எழுந்தாலும், இதற்கு பின்புலத்தில் பா.ஜனதா இருப்பதாக சிவசேனா குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் பா.ஜனதா, சிவசேனா கட்சி தலைவர்களுக்கு இடையே கடும் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புனேயில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமஸ்கிருதிக் பவன் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. பேசியதாவது:-
கவுதம புத்தர் கூறிய ஒரேஒரு செய்தியை மட்டும் எப்போதும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அனைவரும் தங்கள் அகங்காரத்தை கைவிட வேண்டும். அதை கைவிட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் சிலர் மாறாக அகங்காரத்தை வளர்த்துக்கொள்கின்றனர். அகங்காரம் ஒழிந்துவிட்டால் சமுதாயத்தையும், மாநிலத்தையும், நாட்டையும் ஆட்டிப்படைக்கும் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதை யாராவது நரேந்திர மோடியிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்றுவது, அனுமன் பஜனை விவகாரம் என மராட்டிய மாநிலத்தை ஆளும் சிவசேனாவுக்கு அடுத்தடுத்த பிரச்சினைகள் தலைதூக்கி வருகின்றன. நவநிர்மாண் சேனா, சுயேச்சை எம்.பி. நவ்நீத் ரானா மூலம் இந்த பிரச்சினை எழுந்தாலும், இதற்கு பின்புலத்தில் பா.ஜனதா இருப்பதாக சிவசேனா குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் பா.ஜனதா, சிவசேனா கட்சி தலைவர்களுக்கு இடையே கடும் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புனேயில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சமஸ்கிருதிக் பவன் திறப்பு விழாவில் கலந்துகொண்ட சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி. பேசியதாவது:-
கவுதம புத்தர் கூறிய ஒரேஒரு செய்தியை மட்டும் எப்போதும் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அனைவரும் தங்கள் அகங்காரத்தை கைவிட வேண்டும். அதை கைவிட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் சிலர் மாறாக அகங்காரத்தை வளர்த்துக்கொள்கின்றனர். அகங்காரம் ஒழிந்துவிட்டால் சமுதாயத்தையும், மாநிலத்தையும், நாட்டையும் ஆட்டிப்படைக்கும் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதை யாராவது நரேந்திர மோடியிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X