என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நன்கு படித்தவர்களால் தான் அரசியலை மாற்ற முடியும்: பியூஷ் கோயல்
Byமாலை மலர்17 May 2022 3:24 AM GMT (Updated: 17 May 2022 3:24 AM GMT)
நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வராதவரை, அரசியலை மாற்ற முடியாது. அரசியல் தான் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் கருவியாகும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறினார்.
புனே :
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பாரதிய வித்யாபீட பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
தொழில் முனைவோரின் புதிய யோசனைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே கட்டுப்பாடுகளை கடந்து சிந்தியுங்கள். ஏற்கனவே உள்ள தகர்ந்துபோன பாதையில் பயணிக்க வேண்டாம். இப்படி நான் பேச காரணம் நீங்கள் நல்ல வேலையில் சேரவேண்டும் என்பதையோ அல்லது ஒரு அரசு அதிகாரியாக ஆவதையோ நான் விரும்பவில்லை என்பதல்ல.
ஆனால் ஒரு வசதியான, பாதுகாப்பான வேலையில் அமர்ந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமில்லாதது. வாழ்க்கையில் புதிய பரிசோதனைகளை செய்து பாருங்கள், இதற்கான நேரம் இதுதான். நீங்கள் அதை தாராளமாக செய்து பார்க்கலாம்.
தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு ஆகும். தான் பெற்ற கல்வி அறிவை இந்த சமுதாயத்திற்கு திரும்ப கொடுப்பதும், நாட்டை கட்டி எழுப்புவதும் நல்ல கல்வியை பெற்றவர்களின் கூட்டு பொறுப்பாகும்.
உங்களில் ஒருவர் தீவிர அரசியல்வாதியாக வருவதை நான் பார்க்க விரும்புகிறேன். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வராதவரை, அரசியலை மாற்ற முடியாது. அரசியல் தான் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் கருவியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் பாரதிய வித்யாபீட பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-
தொழில் முனைவோரின் புதிய யோசனைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே கட்டுப்பாடுகளை கடந்து சிந்தியுங்கள். ஏற்கனவே உள்ள தகர்ந்துபோன பாதையில் பயணிக்க வேண்டாம். இப்படி நான் பேச காரணம் நீங்கள் நல்ல வேலையில் சேரவேண்டும் என்பதையோ அல்லது ஒரு அரசு அதிகாரியாக ஆவதையோ நான் விரும்பவில்லை என்பதல்ல.
ஆனால் ஒரு வசதியான, பாதுகாப்பான வேலையில் அமர்ந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமில்லாதது. வாழ்க்கையில் புதிய பரிசோதனைகளை செய்து பாருங்கள், இதற்கான நேரம் இதுதான். நீங்கள் அதை தாராளமாக செய்து பார்க்கலாம்.
தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு ஆகும். தான் பெற்ற கல்வி அறிவை இந்த சமுதாயத்திற்கு திரும்ப கொடுப்பதும், நாட்டை கட்டி எழுப்புவதும் நல்ல கல்வியை பெற்றவர்களின் கூட்டு பொறுப்பாகும்.
உங்களில் ஒருவர் தீவிர அரசியல்வாதியாக வருவதை நான் பார்க்க விரும்புகிறேன். நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வராதவரை, அரசியலை மாற்ற முடியாது. அரசியல் தான் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் கருவியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X