என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இளைஞர் கொலையால் பதற்றம்- ராஜஸ்தான் பில்வாரா பகுதியில் இணைய சேவைகள் முடக்கம்
Byமாலை மலர்11 May 2022 7:25 AM GMT (Updated: 11 May 2022 9:18 AM GMT)
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு நடந்த வகுப்புவாத பிரச்சனை ஒன்றின் காரணமாக கரெளலி, ஆழ்வார் மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெய்பூர்:
ராஜஸ்தானின் பில்வாரா பகுதியில், கோடவாலி காவல் நிலையம் அருகே 22 வயதான இளைஞர் ஒருவர் தனது தம்பிக்கு ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய சென்றுள்ளார். அப்போது அவர் மாற்று மத இளைஞரால் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து இந்த கொலையை கண்டித்து சில வலதுசாரி இயக்கத்தினர் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனை மேலும் வளராமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நிலைமை கைமீறி செல்லாமல் தடுக்க பில்வாரா பகுதியில் நாளை காலை 6 மணி வரை இணையம் முடக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு நடந்த வகுப்புவாத பிரச்சனை ஒன்றின் காரணமாக கரெளலி, ஆழ்வார் மற்றும் ஜோத்பூர் ஆகிய இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் மோடி கூறுகையில், பில்வாரா பகுதியில் நேற்று இரவு முதல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் முடக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X