என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மத்திய மந்திரி அமித்ஷாவின் மூன்று நாட்கள் அசாம் சுற்றுப்பயணம்
Byமாலை மலர்9 May 2022 7:34 AM GMT (Updated: 9 May 2022 8:56 AM GMT)
நாளை கவுகாத்தியில் நடக்கும் விழாவில் பங்கேற்று அசாம் காவல்துறைக்கு அமித்ஷா விருது வழங்கவுள்ளார்.
கவுகாத்தி:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அசாமில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை நேற்று கவுகாத்தி விமான நிலையத்தில் சந்தித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர், அம்மாநில முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வ சர்மா அரசின் ஓராண்டு நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். மேலும், வங்காள தேசம் எல்லைப்பகுதிக்கும் பயணம் செய்ய உள்ளார்.
இன்று மன்காசார் எல்லைப் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை சந்தித்து அமித்ஷா கலந்துரையாட உள்ளார். தமுல்பூர் மாவட்டத்தில் உள்ள கெளஞ்சியில் மத்திய ஆயுத துணை ராணுவப் படை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் பங்கேற்பார். அடுத்ததாக, நாளை, கவுகாத்தியில் நடக்கும் விழாவில் பங்கேற்று அசாம் காவல்துறைக்கு அமித்ஷா விருது வழங்கவுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X