என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்வு- வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும்
Byமாலை மலர்4 May 2022 10:04 AM GMT (Updated: 4 May 2022 11:55 AM GMT)
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
புது டெல்லி:
ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான வங்கி வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறியதாவது:-
உக்ரைனில் நடந்து வரும் யுத்தம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் குறுகியகால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில், நிதிக்கொள்கை குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் வட்டி விகிதம் உயருகிறது.
இவ்வாறு சக்தி காந்ததாஸ் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு காரணமாக வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X