என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நிதி நிர்வாகத்துக்கு உக்ரைன் நிலவரம் சவாலாக உள்ளது: நிர்மலா சீதாராமன்
Byமாலை மலர்23 Feb 2022 2:02 AM GMT (Updated: 23 Feb 2022 2:02 AM GMT)
உக்ரைனில் சர்வதேச அளவில் கவலைக்குரிய சூழ்நிலை நிலவி வருகிறது. உக்ரைன் பிரச்சினைக்கு தூதரக வழிமுறையில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
மும்பை :
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மும்பையில் நிதி ஸ்திரத்தன்மை மேம்பாட்டு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த கூட்டத்தில், ரஷியா-உக்ரைன் மோதல் விவகாரம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த 2 பிரச்சினைகளும் இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மைக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. உக்ரைனில் சர்வதேச அளவில் கவலைக்குரிய சூழ்நிலை நிலவி வருகிறது. உக்ரைன் பிரச்சினைக்கு தூதரக வழிமுறையில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்த பதற்றத்தால் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
கச்சா எண்ணெய் விலை எப்படி போகும் என்று கணிப்பது கடினம். தற்போது, பீப்பாய்க்கு 96 டாலராக உள்ளது. விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பெட்ரோல், டீசல் சில்லரை விலையை மாற்றி அமைப்பது பற்றி எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்யும்.
எல்.ஐ.சி.யின் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்க முடிவு செய்துள்ளோம். அதற்காக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யிடம் விண்ணப்பித்தவுடன் பங்குச்சந்தையில் ஆர்வம் எழுந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் நிகழ்ந்த தவறுகள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் மும்பையில் நிதி ஸ்திரத்தன்மை மேம்பாட்டு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
பின்னர், நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த கூட்டத்தில், ரஷியா-உக்ரைன் மோதல் விவகாரம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த 2 பிரச்சினைகளும் இந்தியாவின் நிதி ஸ்திரத்தன்மைக்கு சவாலாக உருவெடுத்துள்ளன. உக்ரைனில் சர்வதேச அளவில் கவலைக்குரிய சூழ்நிலை நிலவி வருகிறது. உக்ரைன் பிரச்சினைக்கு தூதரக வழிமுறையில் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்த பதற்றத்தால் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை. ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
கச்சா எண்ணெய் விலை எப்படி போகும் என்று கணிப்பது கடினம். தற்போது, பீப்பாய்க்கு 96 டாலராக உள்ளது. விலை நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பெட்ரோல், டீசல் சில்லரை விலையை மாற்றி அமைப்பது பற்றி எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்யும்.
எல்.ஐ.சி.யின் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்க முடிவு செய்துள்ளோம். அதற்காக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யிடம் விண்ணப்பித்தவுடன் பங்குச்சந்தையில் ஆர்வம் எழுந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் நிகழ்ந்த தவறுகள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்...உத்தர பிரதேசத்தில் 4ம் கட்ட தேர்தல் - 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X