என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஜார்க்கண்ட்டில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்ப்பு- மாவோயிஸ்டுகள் நாசவேலை
Byமாலை மலர்27 Jan 2022 6:56 AM GMT (Updated: 27 Jan 2022 6:56 AM GMT)
ஜார்க்கண்ட்டில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்திற்கு மாவோயிஸ்டுகளே காரணம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள சிச்சாகி மற்றும் சவுதரிபந்த் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இன்று அதிகாலை குண்டு வெடித்தது.
இதனால் தண்டவாளம் கடும் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த குண்டு வெடிப்பு காரணமாக ஹவுரா-டெல்லி வழி தடத்தில் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
அந்த வழிதடத்தில் செல்லும் பல ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதத்தை ஊழியர்கள் சரிசெய்த பின்னர் சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு அந்த வழி தடத்தில் ரெயில் சேவை தொடங்கியது.
இந்த நாசவேலையை மாவோயிஸ்டுகள் செய்துள்ளனர் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித் ரோணு விசாரணையை தொடங்கியுள்ளார்.
ஜார்க்கண்ட் போலீசாரால் தேடப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் மூத்த தலைவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து 24 மணி நேர பந்த்துக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில்தான் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள சிச்சாகி மற்றும் சவுதரிபந்த் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இன்று அதிகாலை குண்டு வெடித்தது.
இதனால் தண்டவாளம் கடும் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த குண்டு வெடிப்பு காரணமாக ஹவுரா-டெல்லி வழி தடத்தில் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
அந்த வழிதடத்தில் செல்லும் பல ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதத்தை ஊழியர்கள் சரிசெய்த பின்னர் சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு அந்த வழி தடத்தில் ரெயில் சேவை தொடங்கியது.
இந்த நாசவேலையை மாவோயிஸ்டுகள் செய்துள்ளனர் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித் ரோணு விசாரணையை தொடங்கியுள்ளார்.
ஜார்க்கண்ட் போலீசாரால் தேடப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் மூத்த தலைவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து 24 மணி நேர பந்த்துக்கு அந்த அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில்தான் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X