என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மும்பை அடுக்குமாடி தீவிபத்து - பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Byமாலை மலர்22 Jan 2022 9:36 AM GMT (Updated: 22 Jan 2022 10:40 AM GMT)
மும்பை தார்டியோ அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
மும்பையின் தார்டியோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 20 தளங்கள் கொண்ட அந்தக் குடியிருப்பின் 18-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர். மீட்புப்பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், மும்பை தார்டியோ அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தோர் குடும்பத்துக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...ரெயிலில் சத்தமாக பாட்டு கேட்டு பயணிப்பவரா?... இனிமேல் உஷார்!!
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X