search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஊரடங்கு
    X
    ஊரடங்கு

    வார இறுதி ஊரடங்கு ரத்து -கர்நாடகா அரசு அறிவிப்பு

    பெங்களூரு நகரில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் வரும் 29-ம் தேதி வரை பள்ளிக்கூடங்கள் மூடியிருக்கும் என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.
    பெங்களூரு:

    இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து, கொரோனாதொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜனவரி 7-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வாராந்திர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

    இந்நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி பசவராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

    கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இதுவரை அமலில் இருந்த வாராந்திர ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வதாக அரசு அறிவித்தது.

    தற்போது அமலில் இருக்கும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவு வழக்கம்போல் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. 

    பெங்களூரு நகரில் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் வரும் 29-ம் தேதி வரை பள்ளிக்கூடங்கள் மூடியிருக்கும். ஆனால், மாநிலம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×