என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தனுக்கு கொரோனா
Byமாலை மலர்21 Jan 2022 5:22 AM GMT (Updated: 21 Jan 2022 5:22 AM GMT)
கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 46,387 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 54,87,898 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடுதலாக உள்ளது.
இதனை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 2 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள முன்னாள் முதல் மந்திரியான 98 வயது அச்சுதானந்தனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல் நடிகர் துல்கர் சல்மானுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 46,387 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 54,87,898 ஆக அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடுதலாக உள்ளது.
இதனை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 2 வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள முன்னாள் முதல் மந்திரியான 98 வயது அச்சுதானந்தனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல் நடிகர் துல்கர் சல்மானுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X