search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மகாராஷ்டிராவில் இன்று மேலும் 41,327 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 2,71,202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

    அதன்படி, இங்கு இன்று ஒரே நாளில் 41,327 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 40,386 பேர் குணமடைந்துள்ளனர்.

    வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 65  ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

    Next Story
    ×