என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
3 ஆண்டுகளாக மனைவி மாற்றும் குழுக்களில் முக்கிய பிரமுகர்களின் மனைவிகள்- விசாரிக்க தயங்கிய போலீசார்
Byமாலை மலர்13 Jan 2022 6:56 AM GMT (Updated: 13 Jan 2022 6:56 AM GMT)
மனைவி மாற்றும் குழுக்களில் இடம்பெற்ற கோவா மற்றும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பற்றிய முக்கிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
கேரளாவில் மனைவி மாற்றும் குழுக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது இப்பிரச்சினையை வெளியே கொண்டு வந்த பெண், 2 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளார். அப்போது இந்த பிரச்சினை பற்றி போலீசார் முறையாக விசாரிக்க வில்லை.
இதற்கு காரணம் என்ன? என்பது பற்றி இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்விபரம்:-
மனைவி மாற்றும் குழுக்கள் பற்றிய தகவல் கிடைத்ததும் முதலில் இதனை போலீசார் பெரிதாக நினைக்கவில்லை. வேண்டுமென்றே புகார் கூறுவதாக எண்ணினர்.
அதன்பின்பு தொடர்ந்து சிலர் இதுபோன்ற புகார்களை கூற போலீசார், இக்குழுக்களின் பின்னணி குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போது தான் இக்குழுவில் பல முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவியரும் உறுப்பினராக இருப்பதை தெரிந்து கொண்டனர்.
விசாரணை என்றால் அவர்களையும் அழைக்க வேண்டும் என்று கருதிய போலீசார், அதற்கு தயங்கி புகாரை முடித்து வைப்பதிலேயே ஆர்வம் காட்டி உள்ளனர்.
இப்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதும், அப்போது இந்த புகாரை விசாரித்த அதிகாரிகள் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.
தற்போது இப்பிரச்சினையை வெளியே கொண்டு வந்த பெண், 2 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளார். அப்போது இந்த பிரச்சினை பற்றி போலீசார் முறையாக விசாரிக்க வில்லை.
இதற்கு காரணம் என்ன? என்பது பற்றி இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்விபரம்:-
மனைவி மாற்றும் குழுக்கள் பற்றிய தகவல் கிடைத்ததும் முதலில் இதனை போலீசார் பெரிதாக நினைக்கவில்லை. வேண்டுமென்றே புகார் கூறுவதாக எண்ணினர்.
அதன்பின்பு தொடர்ந்து சிலர் இதுபோன்ற புகார்களை கூற போலீசார், இக்குழுக்களின் பின்னணி குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போது தான் இக்குழுவில் பல முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவியரும் உறுப்பினராக இருப்பதை தெரிந்து கொண்டனர்.
விசாரணை என்றால் அவர்களையும் அழைக்க வேண்டும் என்று கருதிய போலீசார், அதற்கு தயங்கி புகாரை முடித்து வைப்பதிலேயே ஆர்வம் காட்டி உள்ளனர்.
இப்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதும், அப்போது இந்த புகாரை விசாரித்த அதிகாரிகள் தங்களுக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.
தற்போது இந்த வழக்கின் விசாரணையை கேரள உயர் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இந்த குழுக்களில் இடம்பெற்ற கோவா மற்றும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பற்றிய முக்கிய விபரங்களை சேகரித்து வருகிறார்கள். அவர்களை பிடித்தால் மனைவி மாற்றும் குழுக்களின் நெட்வொர்க் பற்றிய முழு விபரமும் தெரியவரும் என்று கருதுகிறார்கள்.
இதையும் படியுங்கள்...மனைவி மாற்றும் குழுக்களில் இணைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கணவரை பிரிந்தனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X