என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மனைவி மாற்றும் குழுவினரின் உல்லாசத்தை வீடியோவில் பதிவு செய்து மிரட்டிய கும்பல்- விசாரணையில் பகீர் தகவல்
Byமாலை மலர்12 Jan 2022 9:15 AM GMT (Updated: 12 Jan 2022 9:15 AM GMT)
வளைகுடா நாட்டில் வேலை பார்த்தபோது பெண்ணின் கணவருக்கு அவரது நண்பர் மூலம் மனைவி மாற்றும் குழுவின் லிங்க் கிடைத்துள்ளது. சபலத்திற்கு ஆளான பெண்ணின் கணவர் குழுவில் இணைந்துள்ளார், மனைவியையும் இணைய வைத்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கோட்டயம் கருக்கச்சல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 8-ந்தேதி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த பெண்ணின் புகார் மூலம் கேரளாவில் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்படுவது வெளிச்சத்திற்கு வந்தது. இக்குழுக்களால் அந்த பெண் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதும் தெரிய வந்தது.
இதற்கு அந்த பெண்ணின் கணவரே உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த போலீசார் பெண்ணின் கணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்படுவது தெரிய வந்தது.
பெண்ணின் கணவர் கொடுத்த தகவலின்பேரில், இக்குழுவிற்கு மூளையாக செயல்பட்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் செல்போன், லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றை சைபர் கிரைம் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். அதில், மனைவி மாற்றும் குழுக்கள் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
கேரளாவில் செயல்பட்டு வந்த மனைவி மாற்றும் குழுக்கள் கடந்த 3½ ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்துள்ளது. இதுவரை இக்குழு பற்றிய தகவல் போலீசாருக்கு தெரியாமல் இருந்தது எப்படி? என்பது பற்றி போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதற்காக ஏற்கனவே புகார் கொடுத்த பெண்ணிடமும் விசாரித்தனர். அப்போது தான் பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவரை காதல் திருமணம் செய்து வளைகுடா நாட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்தபோது பெண்ணின் கணவருக்கு அவரது நண்பர் மூலம் மனைவி மாற்றும் குழுவின் லிங்க் கிடைத்துள்ளது.
அந்த லிங்க்கை திறந்து பார்த்ததும், அதில் பல்வேறு ஆபாச படங்கள் இருந்துள்ளது. அதோடு, திருமணம் ஆனவர்கள் அவர்களின் மனைவியை பிறருடன் பகிர்ந்து கொண்டு உல்லாசமாக இருக்கலாம் என்ற தகவலும் இருந்தது. இதன் மூலம் சபலத்திற்கு ஆளான பெண்ணின் கணவர் குழுவில் இணைந்துள்ளார். மனைவியையும் இணைய வைத்துள்ளார்.
முதலில் காதல் கணவரின் ஆசைக்காக பிறருடன் உல்லாசமாக இருந்த பெண், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட மறுத்தார். ஆனால் கணவர் அவரை தொடர்ந்து வற்புறுத்தியதோடு, ஏற்கனவே அந்த பெண் பிறரோடு உல்லாசமாக இருந்த காட்சிகளை காட்டி மிரட்டி உள்ளார்.
மனைவி மாற்றும் குழு பற்றியும், அதில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் வெளியே தெரிவித்தால் அவர் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவதோடு, இணைய தளத்திலும் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதற்கு பயந்துதான் அந்த பெண், மனைவி மாற்றும் குழுக்கள் பற்றி வெளியே கூறாமல், மவுனம் காத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இதுபற்றி தனது சகோதரரிடம் கூறி அழுதுள்ளார். அவர்தான் போலீசாரிடம் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளார். அதன் பிறகுதான் இந்த குழுக்கள் பற்றிய விவரங்கள் வெளியே தெரிந்தது.
கேரளாவில் கோட்டயம் கருக்கச்சல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 8-ந்தேதி போலீஸ் உயர் அதிகாரிகளிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அந்த பெண்ணின் புகார் மூலம் கேரளாவில் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்படுவது வெளிச்சத்திற்கு வந்தது. இக்குழுக்களால் அந்த பெண் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதும் தெரிய வந்தது.
இதற்கு அந்த பெண்ணின் கணவரே உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த போலீசார் பெண்ணின் கணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்படுவது தெரிய வந்தது.
பெண்ணின் கணவர் கொடுத்த தகவலின்பேரில், இக்குழுவிற்கு மூளையாக செயல்பட்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் செல்போன், லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றை சைபர் கிரைம் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். அதில், மனைவி மாற்றும் குழுக்கள் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.
கேரளாவில் செயல்பட்டு வந்த மனைவி மாற்றும் குழுக்கள் கடந்த 3½ ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்துள்ளது. இதுவரை இக்குழு பற்றிய தகவல் போலீசாருக்கு தெரியாமல் இருந்தது எப்படி? என்பது பற்றி போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதற்காக ஏற்கனவே புகார் கொடுத்த பெண்ணிடமும் விசாரித்தனர். அப்போது தான் பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவரை காதல் திருமணம் செய்து வளைகுடா நாட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. வளைகுடா நாட்டில் வேலை பார்த்தபோது பெண்ணின் கணவருக்கு அவரது நண்பர் மூலம் மனைவி மாற்றும் குழுவின் லிங்க் கிடைத்துள்ளது.
அந்த லிங்க்கை திறந்து பார்த்ததும், அதில் பல்வேறு ஆபாச படங்கள் இருந்துள்ளது. அதோடு, திருமணம் ஆனவர்கள் அவர்களின் மனைவியை பிறருடன் பகிர்ந்து கொண்டு உல்லாசமாக இருக்கலாம் என்ற தகவலும் இருந்தது. இதன் மூலம் சபலத்திற்கு ஆளான பெண்ணின் கணவர் குழுவில் இணைந்துள்ளார். மனைவியையும் இணைய வைத்துள்ளார்.
முதலில் காதல் கணவரின் ஆசைக்காக பிறருடன் உல்லாசமாக இருந்த பெண், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட மறுத்தார். ஆனால் கணவர் அவரை தொடர்ந்து வற்புறுத்தியதோடு, ஏற்கனவே அந்த பெண் பிறரோடு உல்லாசமாக இருந்த காட்சிகளை காட்டி மிரட்டி உள்ளார்.
மனைவி மாற்றும் குழு பற்றியும், அதில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் வெளியே தெரிவித்தால் அவர் உல்லாசமாக இருக்கும் காட்சிகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவதோடு, இணைய தளத்திலும் வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதற்கு பயந்துதான் அந்த பெண், மனைவி மாற்றும் குழுக்கள் பற்றி வெளியே கூறாமல், மவுனம் காத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இதுபற்றி தனது சகோதரரிடம் கூறி அழுதுள்ளார். அவர்தான் போலீசாரிடம் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளார். அதன் பிறகுதான் இந்த குழுக்கள் பற்றிய விவரங்கள் வெளியே தெரிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X