என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து மீள சாதாரண சிகிச்சையே போதும்: மருத்துவ நிபுணர்
Byமாலை மலர்25 Dec 2021 2:02 AM GMT (Updated: 25 Dec 2021 2:02 AM GMT)
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், இது லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாகவும், ஆஸ்பத்திரி சேர்க்கையும், இறப்பும் குறைவாகவே இருப்பதாகவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
புதுடெல்லி
கர்நாடகத்தில் கடந்த 2-ந் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த 23 நாளில் நாட்டின் 17 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது. பல நூறு பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
தலைநகர் டெல்லி, ஒமைக்ரான் பாதிப்பில் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்கள், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்.
அவர்களுக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றி மூத்த டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
டெல்லி விமானநிலையம் வந்திறங்குகிற பயணிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர். அவர்களில் பெரும்பாலானவரகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். நான்கில் மூன்று பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்தான்.
ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகிறவர்களில் 90 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் அறிகுறியில்லாதவர்கள். எஞ்சியவர்கள் தொண்டை வலி, லேசான காய்ச்சல், உடல்வலி ஆகியவற்றால் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் மற்றும் காய்ச்சல் சிகிச்சைக்கான பாரசிட்டமால் மாத்திரைகளைத் தருகிறோம். அவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் தர வேண்டிய தேவை ஏற்படும் என்று நாங்கள் கருதவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை மருத்துவ அதிகாரி ரிது சக்சேனா கூறுகையில், “நாங்கள் இதுவரை 40 பேரை அனுமதித்துள்ளோம். 2 பேருக்கு மட்டுமே தொண்டை வலி, லேசான காய்ச்சல், உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு பாரசிட்டமால், ஆன்டிபயாடடிக் மருந்துகள் கொடுத்தோம். அறிகுறிகள் இல்லாத மற்ற நோயாளிகளுக்கு பல்வேறு வைட்டமின் மாத்திரைகளையே கொடுத்தோம்” என்றார்.
சர் கங்காராம் ஆஸ்பத்திர, மேக்ஸ் ஆஸ்பத்திரி, போர்டடிஸ் ஆஸ்பத்திரி, பத்ரா ஆஸ்பத்திரி ஆகியவற்றில் ஒமைக்ரான் சந்தேக நோயாளிகளை சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தினமும் 1 லட்சம் நோயாளிகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தினந்தோறும் 3 லட்சம் சோதனைகள் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், இது லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாகவும், ஆஸ்பத்திரி சேர்க்கையும், இறப்பும் குறைவாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் கடந்த 2-ந் தேதி 2 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த 23 நாளில் நாட்டின் 17 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது. பல நூறு பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
தலைநகர் டெல்லி, ஒமைக்ரான் பாதிப்பில் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானவர்கள், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்கள்.
அவர்களுக்கு அளிக்கப்படுகிற சிகிச்சை பற்றி மூத்த டாக்டர் ஒருவர் கூறியதாவது:-
டெல்லி விமானநிலையம் வந்திறங்குகிற பயணிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர். அவர்களில் பெரும்பாலானவரகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். நான்கில் மூன்று பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்தான்.
ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகிறவர்களில் 90 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் அறிகுறியில்லாதவர்கள். எஞ்சியவர்கள் தொண்டை வலி, லேசான காய்ச்சல், உடல்வலி ஆகியவற்றால் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் மற்றும் காய்ச்சல் சிகிச்சைக்கான பாரசிட்டமால் மாத்திரைகளைத் தருகிறோம். அவர்களுக்கு வேறு எந்த மருந்துகளும் தர வேண்டிய தேவை ஏற்படும் என்று நாங்கள் கருதவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தலைமை மருத்துவ அதிகாரி ரிது சக்சேனா கூறுகையில், “நாங்கள் இதுவரை 40 பேரை அனுமதித்துள்ளோம். 2 பேருக்கு மட்டுமே தொண்டை வலி, லேசான காய்ச்சல், உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கு பாரசிட்டமால், ஆன்டிபயாடடிக் மருந்துகள் கொடுத்தோம். அறிகுறிகள் இல்லாத மற்ற நோயாளிகளுக்கு பல்வேறு வைட்டமின் மாத்திரைகளையே கொடுத்தோம்” என்றார்.
சர் கங்காராம் ஆஸ்பத்திர, மேக்ஸ் ஆஸ்பத்திரி, போர்டடிஸ் ஆஸ்பத்திரி, பத்ரா ஆஸ்பத்திரி ஆகியவற்றில் ஒமைக்ரான் சந்தேக நோயாளிகளை சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தினமும் 1 லட்சம் நோயாளிகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தினந்தோறும் 3 லட்சம் சோதனைகள் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும், இது லேசான பாதிப்பையே ஏற்படுத்தி வருவதாகவும், ஆஸ்பத்திரி சேர்க்கையும், இறப்பும் குறைவாகவே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்கலாம்...ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி - குஜராத்திலும் இரவு நேர ஊரடங்கு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X