என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயோத்தி ராமர் கோவிலுக்கு புனித நீர் அனுப்பிய ஆப்கானிஸ்தான் சிறுமி
Byமாலை மலர்31 Oct 2021 10:23 AM GMT (Updated: 31 Oct 2021 10:23 AM GMT)
பிரதமர் மோடிக்கு ஆப்கானிஸ்தான் சிறுமி அனுப்பிய புனித நீரை, ஸ்ரீராமருக்கு காணிக்கையாக வழங்குவதற்கு அயோத்தி செல்ல உள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறினார்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. கோவில் கட்டுமானப் பணிக்காக நாடு முழுவதிலும் இருந்து கட்டுமானப் பொருட்கள், நன்கொடைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் கோவிலின் கட்டுமானப் பணியில் பயன்படுத்துவதற்காக 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு சிறுமி, புனித நீரை அனுப்பியிருப்பதாக கூறினார்.
‘ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமி ஒருவர் காபூல் நதி நீரை அயோத்தி ஸ்ரீராம ஜென்மபூமிக்கு வழங்குவதற்காக பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, அந்த புனித நீரை ஸ்ரீராமருக்கு காணிக்கையாக வழங்குவதற்கு நான் அயோத்தி செல்கிறேன்’ என யோகி ஆதித்யநாத் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X