என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தை இல்லாததற்கு பரிகாரம் - பாலியல் தொழிலாளிகள் 2 பேரை நரபலி கொடுத்து பூஜை - 5 பேர் கைது
Byமாலை மலர்24 Oct 2021 6:58 AM GMT (Updated: 24 Oct 2021 6:58 AM GMT)
படத்தை பார்த்து விபசார அழகிகளை கொலை செய்தால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என கருதி கொலையை அரங்கேற்றியதாக கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
குவாலியர்:
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் பாண்டு பதோரியா (வயது 40). இவரது மனைவி மம்தா (36). பாண்டு பதோரியா பள்ளி பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. எனவே இது சம்பந்தமாக பல்வேறு சிகிச்சைகளை பெற்றனர். ஆனாலும் பலன் இல்லை.
இந்த நிலையில் குவாலியர் அருகே உள்ள தாதியாவில் மந்திரவாதி ஒருவர் இருப்பதாகவும், அவர் பூஜை செய்தால் குழந்தை கிடைக்கும் என்றும் சிலர் பாண்டு பதோரியாவிடம் கூறினார்கள்.
இதை நம்பிய பதோரியா மனைவி மம்தாவுடன் சென்று மந்திரவாதி கிரிவார் யாதவை சந்தித்து பேசினார்கள்.
அவர், ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார். இதை நம்பிய அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார்.
இது சம்பந்தமாக அவர்களுக்கு உதவுவதற்கு மம்தாவின் அக்காள் மீரா முன்வந்தார். மீரா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ஆனால் நீரஜ்பார்மர் (வயது 35) என்பவருடன் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்தார்.
அவரும் இந்த செயலுக்கு உதவ முன்வந்தார். அவர் நரபலி கொடுப்பதற்கு யாராவது அனாதைகள் கிடைப்பார்களா? என தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
எனவே விபசார அழகிகளை அழைத்து வந்து நரபலி கொடுக்கலாம் என்று நீரஜ்பார்மர் திட்டமிட்டார். அவருக்கு பெண் போலீஸ் ஒருவரிடம் பழக்கம் உண்டு. பெண் போலீசிடம் விபசார பெண்களின் போன் எண்கள் வேண்டும் என்று கேட்டார்.
அவர் சில பாலியல் தொழில் பெண்களின் போன் எண்களை கொடுத்தார். அதன்படி காசிரா பகுதியை சேர்ந்த ஒரு விபசார அழகியை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் கடந்த 13-ந்தேதி நடந்தது.
பின்னர் மந்திர வாதிக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பூஜை செய்ய ஏற்பாடு செய்தார். ஆனால் விபசார அழகியை கொன்ற விதம் சரியில்லை. இது பூஜைக்கு உதவாது என்று மந்திரவாதி கூறினார்.
எனவே அவருடைய பிணத்தை இரவில் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று எங்காவது ரகசிய இடத்தில் போட்டு விட முடிவு செய்தார்கள். நீரஜ்பார்மர் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி எடுத்து சென்றார்.
ஆனால் வழியில் பிணம் தவறி கீழே விழுந்து விட்டது. எனவே அங்கிருந்த புதரில் வீசி விட்டு வந்து விட்டார். அடுத்ததாக மந்திரவாதி சொன்னபடி இன்னொரு பெண்ணை நரபலி கொடுக்க முடிவு செய்தனர்.
நீரஜ்பார்மர் ஏற்கனவே செய்ததுபோல கடந்த 20-ந்தேதி மற்றொரு விபசார அழகியின் போனில் தொடர்பு கொண்டார். அவரையும் அழைத்து வந்து வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அவரது உடலை வைத்து மந்திரவாதி பூஜை செய்தார். பின்னர் உடல் மறைக்கப்பட்டது.
இதற்கிடையே புதரில் வீசப்பட்ட பெண் உடல் கிடப்பது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தபோது அவர் யார்? என்பது தெரியவந்தது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நீரஜ்பார்மர் அந்த பெண்ணை அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. எனவே நீரஜ்பார்மரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டார். அவர் அளித்த தகவலின்படி 2-வது பெண்ணின் உடலும் கைப்பற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாண்டு பதோரியா, மனைவி மம்தா, அவரது அக்காள் மீரா, நீரஜ்பார்மர், மந்திரவாதி கிரிவார் யாதவ் ஆகியோரை கைது செய்தனர்.
நீரஜ் பார்மரிடம் விசாரித்த போது இந்தி சினிமா ஒன்றை பார்த்ததால் விபசார அழகிகளை அழைத்து வந்து கொன்றதாக கூறினார். அந்த சினிமாவில் ஒருவர் விபசார அழகியை அழைத்து வந்து கொலை செய்வார். அந்த அழகி ஆதரவற்றவராக இருந்தவர். எனவே யாரும் புகார் செய்யாததால் அந்த கொலையை கடைசி வரை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள்.
எனவே படத்தை பார்த்து விபசார அழகிகளை கொலை செய்தால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என கருதி கொலையை அரங்கேற்றியதாக நீரஜ் பார்மர் கூறியுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் பாண்டு பதோரியா (வயது 40). இவரது மனைவி மம்தா (36). பாண்டு பதோரியா பள்ளி பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை இல்லை. எனவே இது சம்பந்தமாக பல்வேறு சிகிச்சைகளை பெற்றனர். ஆனாலும் பலன் இல்லை.
இந்த நிலையில் குவாலியர் அருகே உள்ள தாதியாவில் மந்திரவாதி ஒருவர் இருப்பதாகவும், அவர் பூஜை செய்தால் குழந்தை கிடைக்கும் என்றும் சிலர் பாண்டு பதோரியாவிடம் கூறினார்கள்.
இதை நம்பிய பதோரியா மனைவி மம்தாவுடன் சென்று மந்திரவாதி கிரிவார் யாதவை சந்தித்து பேசினார்கள்.
அவர், ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார். இதை நம்பிய அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார்.
இது சம்பந்தமாக அவர்களுக்கு உதவுவதற்கு மம்தாவின் அக்காள் மீரா முன்வந்தார். மீரா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். ஆனால் நீரஜ்பார்மர் (வயது 35) என்பவருடன் திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி வந்தார்.
அவரும் இந்த செயலுக்கு உதவ முன்வந்தார். அவர் நரபலி கொடுப்பதற்கு யாராவது அனாதைகள் கிடைப்பார்களா? என தேடிப்பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
எனவே விபசார அழகிகளை அழைத்து வந்து நரபலி கொடுக்கலாம் என்று நீரஜ்பார்மர் திட்டமிட்டார். அவருக்கு பெண் போலீஸ் ஒருவரிடம் பழக்கம் உண்டு. பெண் போலீசிடம் விபசார பெண்களின் போன் எண்கள் வேண்டும் என்று கேட்டார்.
அவர் சில பாலியல் தொழில் பெண்களின் போன் எண்களை கொடுத்தார். அதன்படி காசிரா பகுதியை சேர்ந்த ஒரு விபசார அழகியை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் கடந்த 13-ந்தேதி நடந்தது.
பின்னர் மந்திர வாதிக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பூஜை செய்ய ஏற்பாடு செய்தார். ஆனால் விபசார அழகியை கொன்ற விதம் சரியில்லை. இது பூஜைக்கு உதவாது என்று மந்திரவாதி கூறினார்.
எனவே அவருடைய பிணத்தை இரவில் மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று எங்காவது ரகசிய இடத்தில் போட்டு விட முடிவு செய்தார்கள். நீரஜ்பார்மர் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி எடுத்து சென்றார்.
ஆனால் வழியில் பிணம் தவறி கீழே விழுந்து விட்டது. எனவே அங்கிருந்த புதரில் வீசி விட்டு வந்து விட்டார். அடுத்ததாக மந்திரவாதி சொன்னபடி இன்னொரு பெண்ணை நரபலி கொடுக்க முடிவு செய்தனர்.
நீரஜ்பார்மர் ஏற்கனவே செய்ததுபோல கடந்த 20-ந்தேதி மற்றொரு விபசார அழகியின் போனில் தொடர்பு கொண்டார். அவரையும் அழைத்து வந்து வீட்டில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அவரது உடலை வைத்து மந்திரவாதி பூஜை செய்தார். பின்னர் உடல் மறைக்கப்பட்டது.
இதற்கிடையே புதரில் வீசப்பட்ட பெண் உடல் கிடப்பது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரித்தபோது அவர் யார்? என்பது தெரியவந்தது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, நீரஜ்பார்மர் அந்த பெண்ணை அழைத்து செல்வது பதிவாகி இருந்தது. எனவே நீரஜ்பார்மரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் அனைத்து உண்மைகளையும் கூறிவிட்டார். அவர் அளித்த தகவலின்படி 2-வது பெண்ணின் உடலும் கைப்பற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாண்டு பதோரியா, மனைவி மம்தா, அவரது அக்காள் மீரா, நீரஜ்பார்மர், மந்திரவாதி கிரிவார் யாதவ் ஆகியோரை கைது செய்தனர்.
நீரஜ் பார்மரிடம் விசாரித்த போது இந்தி சினிமா ஒன்றை பார்த்ததால் விபசார அழகிகளை அழைத்து வந்து கொன்றதாக கூறினார். அந்த சினிமாவில் ஒருவர் விபசார அழகியை அழைத்து வந்து கொலை செய்வார். அந்த அழகி ஆதரவற்றவராக இருந்தவர். எனவே யாரும் புகார் செய்யாததால் அந்த கொலையை கடைசி வரை போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள்.
எனவே படத்தை பார்த்து விபசார அழகிகளை கொலை செய்தால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என கருதி கொலையை அரங்கேற்றியதாக நீரஜ் பார்மர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X