search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரபலி"

    • அது ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு குழப்பமாக உள்ளது.
    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவனாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

    இந்த தோட்டத்தை நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகிறார். நேற்று தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒருவர் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது தோட்டத்தின் ஒரு பகுதியில், எலும்பு கூடுகள் துண்டு துண்டாக கிடந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அந்த நபர், சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

    அப்போது தோட்டத்தில் சிதைந்த நிலையில் மனித சடலம் கிடந்தது. கை, கால், தலை மற்றும் உடல் பகுதிகள் அனைத்தும் துண்டு, துண்டாக அழுகிய நிலையில் கிடந்தது.

    இதையடுத்து போலீசார் மனித உடலை மீட்டு விசாரித்தனர். மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீரா தோட்டத்தில் இருந்து சிறிது தூரம் விரட்டி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இது தொடர்பாக தடயவியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து, சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

    இந்த சம்பவம் தொட ர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தோட்டத்தில் மீட்கப்பட்ட உடல், மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அது ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு குழப்பமாக உள்ளது.

    தொடர்ந்து போலீசார் தோட்டம் முழுவதும் அலசி ஆராய்ந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது உடல் கிடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு கல் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

    அந்த கல்லை சுற்றிலும் விளக்குகளும் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த கல் முழுவதும் ரத்தக்கறையாகவும் இருந்தது. இதனால் மர்மநபர், யாரையாவது அழைத்து வந்து நரபலி கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    மேலும் அந்த கல்லில் இருந்த ரத்தம் மனித ரத்தமா? அல்லது கோழியின் ரத்தமா? என்பதை உறுதிபடுத்துவதற்காக, அதில் இருந்த ரத்த மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்காக கோவையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே நரபலி கொடுக்கப்பட்டதா என்பது தெரியவரும்.

    மனித உடல் கிடந்த இடத்தில் காலணி ஒன்றும் கிடந்தது. அதனையும் போலீசார் மீட்டுள்ளனர். அதனை வைத்து விசாரணையாது நடக்கிறது. இதுதவிர அண்மையில் யாராவது காணாமல் போய் உள்ளனரா? என்பதை அறிந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ள காணாமல் போனவர்களின் தகவல்களை சேகரித்தும் விசாரித்து வருகின்றனர். கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர் பகுதி போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தனிப்ப டையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தோட்டத்தில் மனித உடல் மீட்கப்பட்டதும், அங்கு நரபலி கொடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதும் காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.
    • வீட்டில் ஒரு சிறுவனை சித்ரவதை செய்ததாக கூறி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள எலத்தூணரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலி மந்திரவாதி ஷபி, ஆயுர்வேத டாக்டர் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வீட்டில் இருந்து நரமாமிசமும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பத்தினம் திட்டா மாவட்டம் மலையாளப்புழா என்ற இடத்தில் சித்து வேலைகளில் ஈடுபட்டு வந்த பெண் மந்திரவாதி ஷோபனா என்பவரும் சிக்கினார்.

    இவர் வீட்டில் ஒரு சிறுவனை சித்ரவதை செய்ததாக கூறி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வந்த அவர் மீண்டும் அதுபோன்ற மந்திரவாத செயல்களை செய்து வந்தார்.

    இந்த நிலையில் பெண் மந்திரவாதி ஷோபனா வீட்டில் இருந்து நேற்று காலை சிறுவன் ஒருவன் அழும் சத்தம் கேட்டது. இது பற்றி அக்கம் பக்கத்தினர், அந்த பகுதியை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் பெண் மந்திரவாதி வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு அறையில் சிறுவன் ஒருவன் இருந்தான். அந்த சிறுவனிடம் வாலிபர்கள் விசாரித்த போது தன்னையும், தனது பெற்றோரையும், பெண் மந்திரவாதி அடைத்து வைத்திருப்பதாக கூறினான்.

    உடனே வாலிபர் சங்க நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பெண் மந்திரவாதி ஷோபனா வீட்டுக்குள் அதிரடியாக சென்றனர். அங்குள்ள அறைகளை சோதனை செய்தனர். இதில் ஒரு அறையில் அந்த சிறுவனும், அவனது பெற்றோரும் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் 3 பேரையும் மீட்ட போலீசார், அவர்கள் எதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என விசாரித்தனர். இது பற்றி சிறுவனின் தந்தை கூறும்போது, ஒரு மோசடி வழக்கில் என்னை போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கில் இருந்து வெளியே வர பெண் மந்திரவாதியை சந்தித்து பேச வந்தேன். இதற்காக ஒரு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

    அந்த பூஜைக்கான பணத்தை நான் கொடுக்க வில்லை. எனவே என்னையும், எனது மனைவி மற்றும் மகனை அவர் ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டார். கடந்த 4 நாட்களாக இங்குதான் நாங்கள் அடைக்கப்பட்டிருந்தோம், என்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுவனை நரபலி கொடுக்க பெண் மந்திரவாதி திட்டமிட்டாரா? என்றும் விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து பெண் மந்திரவாதி ஷோபனா அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • போலீசார் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர்.
    • நரபலியை பார்த்த சாட்சியங்கள் இல்லாததால் டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் தயாரித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    தர்மபுரி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண் கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார்.

    பத்மா, நீண்ட நாட்களாக உறவினர்களுடன் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கேரளா சென்று அவரை தேடினர். இதில் பத்மா, அதே பகுதியை சேர்ந்த முகமது ஷபி என்பவரால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

    போலீசார் முகமது ஷபியை பிடித்து விசாரித்தனர். இதில் முகமது ஷபியும், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த மந்திரவாதி பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் சேர்ந்து நரபலி கொடுத்தது தெரியவந்தது. பத்மாவுடன் கொச்சி பகுதியை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து கைதான 3 பேரையும் சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று போலீசார் ஆதாரங்களை திரட்டினர். மேலும் அவர்கள் வீட்டின் பிரிட்ஜ்ஜில் இருந்த மனித மாமிசத்தையும் கைப்பற்றினர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 3 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு செய்தனர். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில் கைதான 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். முதற்கட்டமாக தர்மபுரி பெண் பத்மா நரபலி வழக்கில் 200 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்து உள்ளனர். பெரும்பாவூர் கோர்ட்டில் இன்று இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    அதில் விஞ்ஞானபூர்வ ஆதாரங்களை போலீசார் இணைத்துள்ளனர். நரபலியை பார்த்த சாட்சியங்கள் இல்லாததால் டிஜிட்டல் ஆதாரங்களை போலீசார் தயாரித்துள்ளனர். முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் ரோஸ்லி வழக்கில் போலீசார் 2 வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.

    • பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.
    • புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நாகவதி அணை அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி பத்மா. சில வருடங்களாக கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் விசாரித்தனர். இதேபோல், கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (50) என்ற பெண்ணும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார்.

    2 பேரின் செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் கடைசியாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் இருவரும் நரபலிக்காக கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கொச்சியை சேர்ந்த முகமது ஷாபி என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இதனை தொடர்ந்து பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.

    அவர்கள் அங்கு சென்று அடையாளம் காட்டினர். இதையடுத்து பல்வேறு சட்டரீதியான நடவடிக்கைகள் முடிந்து இன்று பத்மாவின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பத்மாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

    • இறந்த தந்தையின் உயிரை எப்படியாவது உயிர்த்தெழ நினைத்து குழந்தையை நரபலி கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
    • குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் நரபலி திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

    தென்கிழக்கு டெல்லியில் உள்ள கிழக்கு கைலாஷ் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தந்தையின் உயிரை மீட்டெடுக்க 2 மாத குழந்தையை கடத்தி நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தந்தை மீது அதீத பாசம் கொண்ட பெண், இறந்த தந்தையின் உயிரை எப்படியாவது உயிர்த்தெழ நினைத்து குழந்தையை நரபலி கொடுக்க முடிவெடுத்துள்ளார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்தை அடுத்து, அந்த பெண் தனது திட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு முன்பு 24 மணிநேரத்தில் குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்ட அந்த பெண் நரபலி திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

    • கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார்.
    • மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா, ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களை நரபலி கொடுத்ததாக மந்திரவாதி முகமது ஷபி, மற்றும் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை 12 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே கைதான லைலா, தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி எர்ணாகுளம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது லைலாவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில் லைலாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அவர்கள் வாதிட்டனர். இதையடுத்து லைலாவின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    • டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்ததும் போலீசாரின் விசாரணை தீவிரம் அடையும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி நரபலி கொடுக்கப்பட்டனர்.

    நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி, இலத்தூரை சேர்ந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து பத்மாவின் உடல் பாகங்களை கைப்பற்றினர். 56 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாமிசத்தை கைப்பற்றிய போலீசார் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே கைதான 3 பேரும் தங்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த கொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்ததும் போலீசாரின் விசாரணை தீவிரம் அடையும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக டி.என்.ஏ. பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.

    அதன்பின்பு இந்த வழக்கில் மந்திரவாதிக்கு உதவிய நபர்கள் யார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய தகவல்களும் வெளியாகும் என தெரிகிறது. இதனால் இனி வரும் நாட்களில் இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.

    • நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு, கொலையாளிகள் அதனை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்பட்டது.
    • பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டில் உள்ள பிரிட்ஜில் இருந்து சுமார் 10 கிலோ நரமாமிசமும் கைப்பற்றப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் மாயமானார்கள்.

    இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் முகமது ஷபி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பத்தினம்திட்டா, இலத்தூரை சேர்ந்த பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டில் அவர்களை கொலை செய்ததாக கூறினார்.

    அதன்பேரில் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களை 12 நாள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையின் போது கொலை செய்யப்பட்ட 2 பேரும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

    நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தினமும் புதுபுது தகவல்கள் வெளியானது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு, கொலையாளிகள் அதனை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்பட்டது.

    மேலும் பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டில் உள்ள பிரிட்ஜில் இருந்து சுமார் 10 கிலோ நரமாமிசமும் கைப்பற்றப்பட்டது.

    இதுபற்றி கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ் கூறும்போது, இந்த வழக்கை அறிவியல் பூர்வமாக விசாரித்து வருகிறோம். சைபர்கிரைம் போலீஸ் உதவியுடன் தடயங்களையும் சேகரித்து வருகிறோம்.

    அதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதனை கோர்ட்டில் தெரிவிப்போம் என்றார்.

    இந்த நிலையில் நரபலி வழக்கில் கைதான மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் சார்பில் கேரள ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த வழக்கில் மந்திரவாதி உள்பட 3 பேருக்கும் கீழ் கோர்ட்டு 12 நாள் போலீஸ் காவல் வழங்கியதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் போலீசார் தினமும் கட்டுக்கதைகளை கூறிவருகிறார்கள். மேலும் போலீசார் அவர்களை தொடர்ந்து சித்ரவதை செய்து வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மந்திரவாதிக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முகமது ஷபி கூறியபடி, பகவல் சிங்-லைலா தம்பதியினர் வீட்டின் பிரிட்ஜில் சுமார் 10 கிலோ நரமாமிசத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
    • ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்கும் முன்பு முகமது ஷபி ஏற்கனவே ஒரு பெண்ணை நரபலி கொடுத்ததாக கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பத்தினம்திட்டாவை அடுத்த இலத்தூரில் தமிழக பெண் பத்மா, எர்ணாகுளம் பெண் ரோஸ்லி ஆகியோர் நரபலி கொடுக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த முகமது ஷபி கைது செய்யப்பட்டார். மந்திரவாதியான இவருடன் தொடர்பில் இருந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    பகவல் சிங்குடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட முகமது ஷபி, அவரை செல்வந்தர் ஆக்குவேன் எனக்கூறியே பெண்களை கடத்தி நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.

    நரபலி கொடுத்த பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி அவற்றை சமைத்து சாப்பிட்டதுடன், மீதி இருக்கும் மாமிசத்தை பிரிட்ஜில் பாதுகாப்பாக வைக்கவும் கூறியுள்ளார்.

    முகமது ஷபி கூறியபடி, பகவல் சிங்-லைலா தம்பதியினர் வீட்டின் பிரிட்ஜில் சுமார் 10 கிலோ நரமாமிசத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

    பகவல் சிங் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து நரமாமிசத்தை கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நரமாமிசத்தை பதுக்கி வைத்தது ஏன்? என்று கேட்டபோது, அதனை விற்றால் அதிக பணம் கிடைக்கும் என்று முகமது ஷபி கூறியதாக கைதான லைலா போலீசாரிடம் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

    ரோஸ்லி, பத்மாவை நரபலி கொடுக்கும் முன்பு முகமது ஷபி ஏற்கனவே ஒரு பெண்ணை நரபலி கொடுத்ததாக கூறினார். அந்த பெண்ணின் மாமிசத்தை ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறினார்.

    பெங்களூருவில் இருந்து வந்த மந்திரவாதிகள் அதனை வாங்கி சென்றதாகவும் தெரிவித்தார். இதனை நம்பித்தான் நாங்கள் வீட்டில் நரமாமிசத்தை பாதுகாப்பாக வைத்தோம், என்றார்.

    இதுபற்றி கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ் கூறும்போது, நரமாமிசம் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை. பகவல் சிங், லைலாவை ஏமாற்றவே முகமது ஷபி இப்படி கூறியுள்ளார்.

    என்றாலும் நாங்கள் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களையே சேகரித்து வருகிறோம். இதில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. விரைவில் அதனை கோர்ட்டில் சமர்ப்பிப்போம், என்றார்.

    • முகமது ஷபி, மேலும் ஒரு பெண்ணை இதுபோல நரபலி கொடுத்தார் என்று லைலா கூறினார்.
    • முகமது ஷபி, மேலும் ஒரு பெண்ணை இதுபோல நரபலி கொடுத்தார் என்று லைலா கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தமிழக பெண் பத்மா உள்பட 2 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இதில் பத்மாவின் செல்போனில் கடைசியாக பேசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்தான் பத்மாவை கொலை செய்தது தெரியவந்தது. எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த அவரது பெயர் முகமது ஷபி.

    மந்திரவாதியான இவர் பத்தினம்திட்டா, இலத்தூரில் மசாஜ் வைத்தியம் செய்து வந்த பகவல் சிங், அவரது மனைவி லைலாவுடன் சேர்ந்து இக்கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    கைதான 3 பேரையும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணை 4 மாதங்களுக்கு முன்பு கடத்தியதாகவும், அவரை இலத்தூர் வீட்டிற்கு அழைத்து வந்து நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்ததாக தெரிவித்தனர்.

    பின்னர் பத்மாவை கடந்த மாதம் இதுபோல கடத்தி வந்து அவரையும் நரபலி கொடுத்ததாக கூறினர். அடுத்தடுத்து 2 பெண்கள் நரபலி கொடுத்ததாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து போலீசார் முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை 12 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். மேலும் 3 பேரிடமும் தனித்தனியாகவும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் நரபலி கொடுக்கப்பட்ட பத்மாவின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்ட தகவல் வெளியானது. மேலும் உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து அதனை பிரிட்ஜில் பத்திரமாக வைத்திருப்பதாகவும் கூறினர்.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் இலத்தூர் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பிரிட்ஜில் இருந்த நரமாமிசத்தை கைப்பற்றினர். அவற்றை ஆய்வுக்கு அனுப்பிய போலீசார், டி.என்.ஏ. பரிசோதனைக்கும் ஏற்பாடு செய்தனர்.

    இதற்கிடையே இலத்தூர் பகவல் சிங் வீட்டிற்கு முகமது ஷபி சில மாணவிகளை அழைத்து வந்தது தெரிய வந்தது. அந்த மாணவிகள் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்களையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த விசாரணை நடந்து வந்த நிலையில் முகமது ஷபியின் கைகளில் இருந்து 2 பெண்கள் தப்பியதாக தகவல் வெளியானது. இதில் ஒரு பெண் இலத்தூர் வீடு வரை சென்று அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும், இன்னொரு பெண், முகமதுஷபி அழைத்தும் அவருடன் செல்ல தாமதம் காட்டியதால் தப்பிய விபரமும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் கைதான பகவல் சிங்கின் மனைவி லைலாவை தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் முகமது ஷபி, மேலும் ஒரு பெண்ணை இதுபோல நரபலி கொடுத்தார் என்று லைலா கூறினார்.

    அந்த பெண்ணை நரபலி கொடுத்து அவரது உடல் உறுப்புகளை நல்ல விலைக்கு விற்றதாக முகமது ஷபி கூறியதாக லைலா போலீசாரிடம் கூறினார். மேலும் அந்த பெண் யார்? எப்போது அவர் கொலை செய்யப்பட்டார் என்ற விபரம் தனக்கு தெரியாது எனவும் தெரிவித்தார்.

    இதுபற்றி போலீசார் உடனடி விசாரணை மேற்கொண்டனர். அதில் உடல் உறுப்புகள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பகவல் சிங்கை நம்பவைக்கவே முகமது ஷபி இதுபோன்று கூறியிருக்கலாம் எனவும் போலீசார் கூறினர்.

    கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ், இதுபற்றி கூறும்போது, இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். எங்களின் சைபர் கிரைம் போலீசார் பல்வேறு முக்கிய தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். அதுபற்றிய விபரங்கள் கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்றார்.

    • பத்தினம்திட்டா இலத்தூரில் நரபலி நடந்த வீடு இலத்தூர் சந்திப்பில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
    • ஆட்டோவில் பலரும் பயணம் செய்து நரபலி வீட்டை பார்த்து செல்கிறார்கள்.

    பத்தினம்திட்டா இலத்தூரில் நரபலி நடந்த வீடு இலத்தூர் சந்திப்பில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு இப்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டை சுற்றி தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வீட்டை பார்க்க தினமும் பத்தினம் திட்டா பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் இலத்தூரில் இறங்கி நரபலி வீட்டை பார்க்க ஆட்டோக்களை தேடி அலைந்தனர். இதையடுத்து இலத்தூரில் ஆட்டோ ஓட்டும் டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் அறிவிப்பு சீட்டு ஒன்றை ஒட்டியுள்ளார்.

    அதில் இலத்தூர் நரபலி வீட்டிற்கு செல்ல ரூ. 50 கட்டணம் என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த ஆட்டோவில் பலரும் பயணம் செய்து நரபலி வீட்டை பார்த்து செல்கிறார்கள். இதன்மூலம் தினசரி தனக்கு ரூ.1200 வரை வருமானம் வருவதாக அந்த ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

    • தனக்கு தெரிந்த மந்திரவாதியிடம் சென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கங்கே கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார்.
    • வீட்டிற்கு வந்த வேணுகோபால் மகளை நரபலி கொடுப்பது சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை பிறவியில் பிறந்த 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பெண் குழந்தையின் பெயர் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். கொரோனா காலத்தில் வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது.

    இதனால் வேணுகோபால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கினார். கடனை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டு வற்புறுத்தினர். மேலும் தொடர்ந்து தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார்.

    இந்த நிலையில் தனக்கு தெரிந்த மந்திரவாதியிடம் சென்று தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்கங்கே கடன் வாங்கி நிம்மதி இல்லாமல் இருப்பதாக கூறினார். அதற்கு மந்திரவாதி குழந்தைகள் யாரையாவது நரபலி கொடுத்தால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடன் தொல்லை நீங்கிவிடும் என தெரிவித்தார். இதனை உண்மை என நம்பிய வேணுகோபால் தனது 2 மகள்களில் ஒருவரை நரபலி கொடுப்பது என முடிவு செய்தார்.

    வீட்டிற்கு வந்த வேணுகோபால் மகளை நரபலி கொடுப்பது சம்பந்தமாக மனைவியிடம் ஆலோசனை நடத்தினார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று மாலை மகளை நரபலி கொடுப்பதற்கான பூஜை ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. இரவு 11 மணி அளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புணர்விகா கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு ஓடிவந்தனர். அவர்கள் அங்கு கண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து சிறுமியை மீட்டனர். வேணுகோபாலை அங்குள்ள கட்டிலில் கட்டி அறையில் போட்டு பூட்டினர்.

    இதுகுறித்து அத்மகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் ரேணுகோபாலை கைது செய்து விசாரணை நடத்தியதில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தனது மகளை நரபலி கொடுத்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என தனக்கு தெரிந்த மந்திரவாதி கூறியதால் மகளை நரபலி கொடுக்க முயன்றதாக தெரிவித்தார்.

    மேலும் சிறுமியின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×