search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரியங்கா காந்தி
    X
    பிரியங்கா காந்தி

    உ.பி. சட்டசபை தேர்தலில் 40 சதவீத இடம் பெண்களுக்கு வழங்கப்படும் - பிரியங்கா காந்தி

    உ.பி.யில் அடுத்த ஆண்டு நடைபெற சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக தற்போதைய முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மீண்டும் போட்டியிடுகிறார்.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேசத்தில் முகாமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அடுத்த ஆண்டு உ.பி.யில் நடைபெற சட்டசபை தேர்தலில் 40 சதவீத இடங்களை பெண்களுக்கு வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 

    முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்

    பெண்களால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அவர்கள் முன்னேற வேண்டும். இந்த முடிவு உத்தர பிரதேசத்தின் பெண்களுக்கானது. இந்த முடிவு மாற்றத்தை விரும்பும் பெண்களுக்கானது என தெரிவித்தார்.

    Next Story
    ×