என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்
Byமாலை மலர்27 Sep 2021 8:43 PM GMT (Updated: 27 Sep 2021 8:43 PM GMT)
பட்டாசு வெடிக்கும் நேரத்தில் தளர்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி:
தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கணேசன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம், சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாடு இணை இயக்குநரிடம் கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி கோரிக்கை மனு அளித்துள்ளது. அதில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, நீரி உருவாக்கிய பசுமைப் பட்டாசுகளை தயாரிக்க சங்கத்தைச் சேர்ந்த ஆலைகள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவகாசியைச் சுற்றியுள்ள 8 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, சங்கத்தின் கோரிக்கை மனு தொடர்பாக விரைவாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும். நாட்டின் பன்முக பழக்கவழக்கங்கள், பண்பாடு, சமய சடங்குகளை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைந்தபட்சம் 6 மணி நேரமாக உயர்த்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதையும் படியுங்கள்...மத்திய பிரதேசத்தில் சோகம் - மின்னல் தாக்கி 6 பேர் பலி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X