என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியிடம் எடுத்துச் சொல்லுங்கள்... ஜோ பைடனுக்கு விவசாய சங்க தலைவர் வேண்டுகோள்
Byமாலை மலர்24 Sep 2021 11:13 AM GMT (Updated: 24 Sep 2021 2:01 PM GMT)
கடந்த 11 மாதங்களாக நடைபெறும் போராட்டங்களின்போது குறைந்தது 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்திருப்பதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மோடியுடனான சந்திப்பின்போது, விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசும்படி ஜோ பைடனுக்கு விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயித் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘அன்புள்ள ஜோ பைடன் அவர்களே, இந்திய விவசாயிகளாகிய நாங்கள், பிரதமர் மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறோம். கடந்த 11 மாதங்களாக நடைபெறும் போராட்டங்களின்போது குறைந்தது 700 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். எங்களை பாதுகாக்க, இந்த கருப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது எங்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்’ என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ராகேஷ் திகாயித்.
இதன் மூலம் விவசாயிகளின் போராட்டம் மீண்டும் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X