என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
Byமாலை மலர்8 Sep 2021 1:15 PM GMT (Updated: 8 Sep 2021 1:15 PM GMT)
4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து பாரதிய ஜனதா கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், குஜராத் உள்ளிட்ட 5 மாநிலங்களில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளைத் துவங்கியுள்ள பாஜக, 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பொறுப்பாளர்களை இன்று நியமித்துள்ளது.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை உத்திர பிரதேச தேர்தல் பொறுப்பாளராகவும், பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரல்ஹாத் சிங் ஜோஷியை, உத்தரகாண்ட் தேர்தல் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது.
மேலும் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை பஞ்சாப் மாநில தேர்தல் பொறுப்பாளராகவும், மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பூபேந்திர யாதவை மணிப்பூர் மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் தேசியத் தலைவர் ஜேபி. நட்டா நியமித்துள்ளார்.
தர்மேந்திர பிரதானுடன், 7 பேர் துணை பொறுப்பாளர்களாகவும், கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி மற்றும் மீனாட்சி லேகி, மக்களவை உறுப்பினர் வினோத் சவ்தா உள்ளிட்டோர் கூடுதல் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X