என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
Byமாலை மலர்4 Sep 2021 9:57 AM GMT (Updated: 4 Sep 2021 10:43 AM GMT)
மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.
புதுடெல்லி:
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் உள்ள பவானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
இதேபோல ஒடிசா மாநிலத்தில் உள்ள பிபிலி சட்டசபை தொகுதிக்கும் அதே தினத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 4 தொகுதிகளுக்கான வாக்குகள் அக்டோபர் 3-ந் தேதி எண்ணப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.
ஆனால் தேர்தலில் அவர் தோல்வியை தழுவி இருந்ததால், குறிப்பிட்ட காலத்தில் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெறவேண்டும். இதனால் இடைத்தேர்தலை நடத்துமாறு மம்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் உள்ள பவானிபூர், சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
இதேபோல ஒடிசா மாநிலத்தில் உள்ள பிபிலி சட்டசபை தொகுதிக்கும் அதே தினத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த 4 தொகுதிகளுக்கான வாக்குகள் அக்டோபர் 3-ந் தேதி எண்ணப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்.
ஆனால் தேர்தலில் அவர் தோல்வியை தழுவி இருந்ததால், குறிப்பிட்ட காலத்தில் எம்.எல்.ஏ.வாக தேர்வு பெறவேண்டும். இதனால் இடைத்தேர்தலை நடத்துமாறு மம்தா தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X