search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கேரளாவில் ஒரு மாதத்தில் கொரோனாவுக்கு 4,099 பேர் பலி

    கேரளாவில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தவும், லேசான அறிகுறி உள்ளோரை உடனடியாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

    கேரளாவில் சமீபத்தில் ஓணக்கொண்டாட்டம் உள்ளிட்ட சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகள் காரணமாகவே கொரோனா தொற்று அதிகரித்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதார துறையினர் நோய் பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வும் மேற்கொண்டனர்.  இதில் கொரோனா பாதித்தோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் காட்டிய அலட்சியமும் நோய் பரவலுக்கு காரணம் என தெரியவந்தது.

    இதுபோல  மாநிலம் முழுவதும் மலையோர மாவட்டங்களில் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருப்பதையும் சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்தனர். அங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கேரளாவில் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி வரையிலான ஒரு மாதத்தில்  மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் ஒரு மாதத்தில் மட்டும் 4099 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தவும், லேசான அறிகுறி உள்ளோரை உடனடியாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×