என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் ஒரு மாதத்தில் கொரோனாவுக்கு 4,099 பேர் பலி
Byமாலை மலர்28 Aug 2021 5:31 AM GMT (Updated: 28 Aug 2021 5:31 AM GMT)
கேரளாவில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தவும், லேசான அறிகுறி உள்ளோரை உடனடியாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
கேரளாவில் சமீபத்தில் ஓணக்கொண்டாட்டம் உள்ளிட்ட சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகள் காரணமாகவே கொரோனா தொற்று அதிகரித்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதார துறையினர் நோய் பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வும் மேற்கொண்டனர். இதில் கொரோனா பாதித்தோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் காட்டிய அலட்சியமும் நோய் பரவலுக்கு காரணம் என தெரியவந்தது.
இதுபோல மாநிலம் முழுவதும் மலையோர மாவட்டங்களில் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருப்பதையும் சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்தனர். அங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கேரளாவில் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி வரையிலான ஒரு மாதத்தில் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் ஒரு மாதத்தில் மட்டும் 4099 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தவும், லேசான அறிகுறி உள்ளோரை உடனடியாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
கேரளாவில் சமீபத்தில் ஓணக்கொண்டாட்டம் உள்ளிட்ட சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகள் காரணமாகவே கொரோனா தொற்று அதிகரித்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதார துறையினர் நோய் பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வும் மேற்கொண்டனர். இதில் கொரோனா பாதித்தோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் காட்டிய அலட்சியமும் நோய் பரவலுக்கு காரணம் என தெரியவந்தது.
இதுபோல மாநிலம் முழுவதும் மலையோர மாவட்டங்களில் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருப்பதையும் சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்தனர். அங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கேரளாவில் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி வரையிலான ஒரு மாதத்தில் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் ஒரு மாதத்தில் மட்டும் 4099 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தவும், லேசான அறிகுறி உள்ளோரை உடனடியாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X