என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இமாச்சல பிரதேச நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 25 ஆனது
Byமாலை மலர்16 Aug 2021 11:31 AM GMT (Updated: 16 Aug 2021 11:31 AM GMT)
நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஜெய்ராம் தாகூர் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிம்லா:
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த 11ம் தேதி கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சரக்கு வாகனம், பேருந்து உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கிக்கொண்டன. அந்த வாகனங்களில் இருந்தவர்களில் பலர் இடிபாடுகளில் புதைந்தனர். இந்தோ - திபெத் எல்லை காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று வரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே, பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இத்கவலை பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஜெய்ராம் தாகூர் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும், மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X