என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி.எஸ்.எல்.வி-எப் 10 ராக்கெட் மூலம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வி
Byமாலை மலர்12 Aug 2021 1:01 AM GMT (Updated: 12 Aug 2021 10:00 AM GMT)
இந்தியா இதுவரை 14 ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 4 முறை திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஈ.ஓ.எஸ்-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை வடிவமைத்தது.
2268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இயற்கை பேரழிவுகளை விரைவாக கண்காணிப்பது, பூமியில் உள்ள பெரிய நிலப்பகுதிகளின் நிகழ்நேர படங்களை பெறுவது, விவசாய பயன்பாடு, வனவியல், கனிமங்கள், நீர்நிலைகள், பனிப்பாறைகள், பேரழிவு எச்சரிக்கை, சூறாவளி, இடியுடன் கூடிய மழை போன்றவற்றை துல்லியமாக கண்காணித்து அறிந்து கொள்ள இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைகோளை ஜி.எஸ். எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தி விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இன்று அதிகாலை 5.43 மணிக்கு செயற்கைகோளை சுமந்தபடி ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது.
ஆரஞ்சு வண்ண புகையை கக்கியபடி சீறிப்பாய்ந்த ராக்கெட் விஞ்ஞானிகள் கணித்திருந்த பாதையில் பயணிக்க தொடங்கியது. அப்போது விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ந்தனர். ஆனால் சில நிமிடங்களில் அந்த பாதையில் இருந்து ராக்கெட் விலகியது.
இதனால் செயற்கைகோளை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஈ.ஓ.எஸ்-03 பூமி கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்தும் திட்டம், விண்ணில் நிலைநிறுத்தும் முன்பாக தோல்வியில் முடிந்தது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ‘கிரையோஜெனிக் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயற்கைகோளை சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை’ என்றார்.
இந்தியா இதுவரை 14 ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 4 முறை திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. 2006-ம் ஆண்டு ஒரு முறையும், 2010-ம் ஆண்டு 2 முறையும் தோல்வி அடைந்தது. தற்போது 4-வது முறையாக இன்றைய முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ஈ.ஓ.எஸ்-03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை வடிவமைத்தது.
2268 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இயற்கை பேரழிவுகளை விரைவாக கண்காணிப்பது, பூமியில் உள்ள பெரிய நிலப்பகுதிகளின் நிகழ்நேர படங்களை பெறுவது, விவசாய பயன்பாடு, வனவியல், கனிமங்கள், நீர்நிலைகள், பனிப்பாறைகள், பேரழிவு எச்சரிக்கை, சூறாவளி, இடியுடன் கூடிய மழை போன்றவற்றை துல்லியமாக கண்காணித்து அறிந்து கொள்ள இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைகோளை ஜி.எஸ். எல்.வி. எப்-10 ராக்கெட்டில் பொருத்தி விண்ணில் ஏவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இன்று அதிகாலை 5.43 மணிக்கு செயற்கைகோளை சுமந்தபடி ராக்கெட் விண்ணை நோக்கி பாய்ந்தது.
ஆரஞ்சு வண்ண புகையை கக்கியபடி சீறிப்பாய்ந்த ராக்கெட் விஞ்ஞானிகள் கணித்திருந்த பாதையில் பயணிக்க தொடங்கியது. அப்போது விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ந்தனர். ஆனால் சில நிமிடங்களில் அந்த பாதையில் இருந்து ராக்கெட் விலகியது.
இதனால் செயற்கைகோளை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஈ.ஓ.எஸ்-03 பூமி கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணுக்கு செலுத்தும் திட்டம், விண்ணில் நிலைநிறுத்தும் முன்பாக தோல்வியில் முடிந்தது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ‘கிரையோஜெனிக் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயற்கைகோளை சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை’ என்றார்.
இந்தியா இதுவரை 14 ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதில் 4 முறை திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. 2006-ம் ஆண்டு ஒரு முறையும், 2010-ம் ஆண்டு 2 முறையும் தோல்வி அடைந்தது. தற்போது 4-வது முறையாக இன்றைய முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
இதையும் படியுங்கள்...வெற்றிகரமாக வானில் சீறிப்பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X