என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி நடத்திய காங்கிரஸ்
Byமாலை மலர்17 July 2021 10:24 AM GMT (Updated: 17 July 2021 10:24 AM GMT)
போராட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வந்து, விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
விசாகப்பட்டினம்:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
போராட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வந்து, விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணவீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி எப்போதும் போராட்டம் நடத்தி வருவதாகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதிலும் எரிபொருள் விலையை உயர்த்துவது மக்களின் முதுகெலும்பை உடைக்கும் செயல் என்றும் கட்சி தலைவர் மகேஷ் ஜோஷி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X