search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைக்கிள் பேரணி
    X
    சைக்கிள் பேரணி

    எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி நடத்திய காங்கிரஸ்

    போராட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வந்து, விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
    விசாகப்பட்டினம்:

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி நடத்தி எதிர்ப்பை பதிவு செய்தனர். 

    போராட்டத்தில் பங்கேற்ற சில தொண்டர்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வந்து, விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 

    காங்கிரஸ் போராட்டம்

    இதேபோல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பணவீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி எப்போதும் போராட்டம் நடத்தி வருவதாகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோதிலும் எரிபொருள் விலையை உயர்த்துவது மக்களின் முதுகெலும்பை உடைக்கும் செயல் என்றும் கட்சி தலைவர் மகேஷ் ஜோஷி கூறினார். 
    Next Story
    ×