என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெஞ்சை பதற வைக்கும் கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
Byமாலை மலர்3 July 2021 5:04 PM GMT (Updated: 3 July 2021 5:04 PM GMT)
மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் கார் மீது லாரி மோதிய காட்சிகள் முன்னால் சென்ற ஒரு வாகனத்தில் உள்ள கேமராவில் பதிவானது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை-புனே எக்ஸ்பிரஸ் சாலையில் நேற்று முன்தினம் நடந்த கோர விபத்து வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்தது. கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதனால் நிலைகுலைந்த கார், மற்றொரு லாரியின் பின்னால் மோதியது. மீண்டும் கண்டெய்னர் லாரி மோத, இரண்டு லாரிகளுக்கு இடையில் சிக்கி உருக்குலைந்த கார், சிறிது நேரத்தில் தீப்பிடித்தது. அதேசமயம் கண்டெய்னர் லாரியும் சாலையில் கவிழ்ந்தது.
காரில் பயணம் செய்த குழந்தை உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மீது லாரி மோதிய காட்சிகள் முன்னால் சென்ற ஒரு வாகனத்தில் உள்ள கேமராவில் பதிவானது.
நாடு முழுவதும் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X